Sunday, November 20, 2011

மாத்தி யோசி ..51

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


எங்கே உரிமைகள் அதிகம் ஆகுதோ,அங்கே சண்டை 

வரவும் வாய்ப்புகள் அதிகம்..





1 இருந்த என்னை நீ வந்து ஜோடியாய் ஆக்கினாய் 11 றாய்.

பிறகு நாம் குழந்தை பெற்று குடும்பமாய் ஆகியபோது 111.

# கோவிந்தா..



யாரும் என்னை விரும்பவும் வேணாம்..

யாரும் என்னை வெறுக்கவும் வேணாம்..

என்னை விட்டுடுங்கடா சாமி..



எப்போதுமே ஏமாற்றங்களை தருபவள் எப்படி ஏஞ்சலாக 

இருக்க முடியும்..எனவே தேடி வரும் என்னை திட்டி 

துரத்தாதீர்கள் தேவதைகளே..



நல்லது சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்னு அர்த்தம்

இல்லைங்க..அதுக்காக சொல்ற அத்தனையையும் 

ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே..



புறம் பேசுறவங்களை விட டேஞ்சரானவங்க அதை நம்மகிட்ட 

போட்டு குடுக்குறவங்க..அவனாச்சும் சாப்டா சொல்லி

இருப்பான்..இவனுங்க உசுப்பேத்தி அழ வைக்கிறானுங்க..



அழகா இருக்கும் அத்தனையும் எனக்கு பிடிக்கணும்னு 

அவசியம் இல்ல..எனக்கு பிடிக்கும் அத்தனையும் 

அழகா இருக்கணும்னும் அவசியம் இல்ல..

ரசனைக்கு அர்த்தமே அதானே..

இது புரியாம கொல்றானுங்க சார்..



நான் செய்யாதது எல்லாம் நல்லதும் இல்ல..

நான் செய்றது எல்லாம் கெட்டதும் இல்ல..

நான் நானாகவே வாழ்வதில் உங்களுக்கு 

என்னடா நஷ்டம்..



எவ்வளவு படிச்சாலும் இந்த பொண்ணுங்க SMS அனுப்பும்போது 

ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள்..

I LOVE YOU னு டைப் பண்ணுறதுக்கு 

பதிலா I LIKE YOU அனுப்புறாங்க..




இவன் இப்படித்தான் னு ஏன்டா முடிவு பண்ணி 

முத்திரை குத்துறீங்க..எல்லா நல்லவனுக்கும் ஒரு 

இறந்த காலம் உண்டு..எல்லா கெட்டவனுக்கும் 

எதிர் காலம் உண்டு..சாவடிக்காதீங்க டா..

No comments: