Tuesday, November 15, 2011

ஏன் இப்படி ...50

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




குடிக்கிறது , தம்மடிக்கிறது இதை நிறுத்திட்டீங்கன்னா தயவு 

செய்து யார் கிட்டயும் சொல்லாதீங்க..பயபுள்ளைங்க..

விட்டுட்டேன்னு சொன்னா தான்  அடிச்சே ஆகணும்னு 

வீம்பா அடம் பிடிச்சி குடிக்க வைக்கிறதிலையே 

குறியா இருக்குறானுங்க..





வாழ்க்கையில திருப்தியை தவிர அத்தனையும் 

மலிவா கிடைக்குது..என்ன வாழ்க்கைடா இது..



யே..யப்பா..மத்தவங்களுக்கு விளக்கம் கொடுத்தே நான் 

சுயமிழந்து போயிடுவேன் போலேயே..

அடுத்தவனையும் தன்னைப்போலவே மாத்துறதுல 

அப்படி என்னப்பா உங்களுக்கு ஆசை..


நமக்கு போரடிக்கிற விஷயம் முக்கியமானதாகவும்,முக்கியமா 

தோணும் விஷயம் மொக்கையாகவும் மனைவிக்கும்,

மேனேஜருக்கும் மட்டும் எப்படி தான் தோணுதோ..?



மாமியார் வீட்டில இருக்கும்போது மச்சினியை சைட் 

அடிக்கிறது போலவே சந்தோஷமாவும்,எவனாவது 

பார்த்துட்டா போட்டுக்கொடுத்துருவானேனு  பயமாவும் 

இருக்கு ஆபிஸ்ல உட்காந்துக்கிட்டு 

ட்விட்டர்/பேஸ்புக் பார்க்குறது..



என்னையும் அறியாம ட்விட்டர்/பேஸ்புக்ல இருக்கிற சில பேரை 

அடிக்கடி நினைக்கிறேன்..என்னைப் பிடித்தவர்களையும்,

பிடிக்காதவர்களையும்..

#எனக்கு மட்டும் தான் இந்த வியாதியா..?



நான் போடும் ட்விட்டுகளை RT பண்ணவும்,பேவரிட் பண்ணவும் 

சில பெண்கள் இருக்காங்க.. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச 

இரக்கமுள்ள இதயம் படைத்த பெண்கள் யாராவது இருந்தா 

என்னை லவ் பண்ணி எனக்கு வாழ்க்கை கொடுக்க 

சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்..

தேடித்தேடி என்னால முடியலை..

ப்ளீஸ் ஹெல்ப் மீ..



பசங்க எல்லாம் சரக்கடிக்க போயிட்டானுங்க..நான் மட்டும்

பிரவுசிங் வந்துட்டேன்..நாங்களும் திருந்தனுமல்லப்பா..

ஆனா அத்தனை பேரும் அப்படியே ஷாக் ஆகுறானுங்க..




நாம சொல்ல வர்றதை அவங்க புரிஞ்சிக்கிட்டாலும் 

ஒண்ணுமே சொல்ல மாட்டறாங்க..ஆனா அதையே 

நாம வார்த்தைகளா வெளிப்படுத்திய உடனே ஊடல் வந்துடுது..




வெறுத்தாலும் பரவாயில்லைன்னு ஒரு வீம்புல 

வார்த்தை விட்டுட்டேன்..இப்போ தொடர்பில் இல்லாத 

ஒவ்வொரு நிமிஷமும் பதைப்பா இருக்கு..

#அவ்வ்வ்..அவசரப்பட்டுட்டேனோ..

No comments: