Tuesday, November 1, 2011

அர்த்தம் புரியாத அகராதி

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


சரியான வார்த்தைகள் கிடைக்காத போது சிரிப்பினில் 

நிரப்பி விடுகிறேன்..இப்போது புரிகிறதா உன்னிடம் 

நான் ஏன் அதிகம் சிரிக்கிறேன் என்று..

 

உன்னிடம் பேச வேண்டுமென்று தேக்கிவைத்த 

அத்தனை வார்த்தைகளின் உணர்வுகளையும் கண்ணீரோடு

சிரித்து உனக்கு உணர்த்தி விடுகிறேன்..


 

என்னை மாற்றியது நீ.. மயக்கியது நீ..

உன்னைக்காணாமல் தவிப்பது மட்டும் நான்...


 
எதிர் ட்வீட் போட இயலா ஏஞ்சல் நீ..

அர்த்தம் புரியாத அகராதி நீ..


எங்கும் நிறைந்து இருப்பது இறைவன் மட்டுமல்ல..

என் ஏஞ்சல் நீயும் தான்..

காணும் பெண்களிடமெல்லாம் உன் ஏதோவொரு அம்சம்..


என்னைப்பற்றி யாரேனும் தவறாய்க் கூறினால் என்னை 

விட உனக்கே அதிக கோபம் வருகிறது..

என்னைப்பற்றியே நினைக்கும் உன்னை விட்டு 

வேறு யாரை நான் நினைக்க..?

 
உன் குரலில் மயங்கியிருக்கும் என்னிடம் நீ பேசினாலே 

பல நேரங்களில் எனக்கு புரியாது..இதில் நீ மவுனமாக 

இருந்தால் என் நிலைமை என்னாவது..

நான் கொஞ்சம் தத்தி ஹனி..

 
எதற்கும் / யாருக்கும் கவலைப்படாமல் , 

பயப்படாமல் இருக்கும் நான்..நீ / உனக்கு என்று 

வரும்போது மட்டும் பதறித்துடிக்கிறேனடி..


எனக்கும் உனக்கும் இடையில் எந்த உறவும் இல்லை 

என்று பொய் கூட கூறி விட முடியும்..ஆனால் 

வெறும் நட்பு என்று உண்மையை மறைக்க 

சத்தியமாக முடியாது..


சூழ்நிலை சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் நீ..

உன் நிலை அறிந்தும் ஏதும் செய்ய இயலாமல் 

தவிக்கும் நான்..நம்மிடையே சிக்கிக்கொண்டு 

தவிக்கிறது காதல்..
 

No comments: