Wednesday, November 9, 2011

என் காதலின் கடைசி பரிசு

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


உனக்கான என் காதலின் கடைசி பரிசு 

என் கண்ணீர் துளிகள் மட்டுமே..



அடிக்கடி நீ அழகு நிலையம் செல்வது..

அவர்களுக்கு லேட்டஸ்ட் அழகுக்குறிப்புகளை தரவா..?



உன் கண்களை ஒரு தடவை மூடி பார் என்றதுக்கு 

இருட்டாக இருக்கு என்றாய்..

அது தானடி நீ இல்லாமல் என் வாழ்க்கை..



பொதுவாக யார் பேசினாலும் தமிழே தேன் போல 

செவிகளினில் பாய்கையிலே..உன் இதழில் இருந்து 

வரும் தமிழை என்னவென்று அழைக்க...?




நீ வருத்தப்படும் தருணங்கள் நான் மகிழ்ச்சியாக இருந்த 

கணங்களை விட எப்போது சிறந்ததாகவே 

இருக்கவே விரும்புகிறேன்..




சாப்பாடு நல்லாருக்காடா என்று கேட்கிறாய்..

பக்கத்தில் இருந்து நீ பரிமாறும்போது எனக்கு பசியே

தெரியாது..ருசியா தெரியப்போகிறது..


எந்த ராகத்திலும் அடங்காத சில சொற்கள் உண்டு..

ம்,ச்சீய்,சொல்லுடா,ம்ஹூம் என உன் 

குரலில் வெளிப்படும்போது..


நீ பேசிய வார்த்தைகளை விட சொல்ல எத்தனித்து 

நிறுத்திய வார்த்தைகளே எதிர்ப்பார்ப்பை எகிற செய்கிறது..

ஹே..சொல்லுடி ஹனி..ப்ளீஸ்..


எத்தனை பெண்களைப் பற்றி பேசினாலும்,பழகினாலும் 

என் காதல் உனக்கு மட்டுமே சொந்தமானது என 

எனக்கும் தெரியும்..உனக்கும் தெரியும்..

 
ஆனால் நீ என் மேல் கொண்ட அன்பிற்கும்,அக்கறைக்கும் 

தான் எனக்கு அர்த்தம் தெரியவில்லை..

அடம்பிடிக்காம தெளிவா சொல்லு ஹனி..

நான் கொஞ்சம் தத்தி..

No comments: