Monday, November 28, 2011

ஹனி.. ப்ளீஸ்..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தகதகிக்கும் வெயில் இருந்தவனுக்கு தாகம் தீர்க்கும் 

மழையாய் வந்து உடனே மறைவது என்னடி நியாயம்..

# ஏதாவது பேசு ஹனி..பேசு..



தமிழ் தெரிந்த அத்தனை பேரும் எழுத முடிந்த 

ஒரே கவிதை உன் பெயர் மட்டுமே..



நீ மவுனமாய் இருந்தாலே நான் மரித்துப்போவேன்..

நீயே மரித்த பின்பு ..?




என் மது,புகைப்பழக்கத்தை குறைக்க நீ அத்தனை கடின 

வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம்..

தினம் ஒரு முத்தம் தருகிறேன் என்றிருந்தால் போதும்..

அதை விட வேறென்ன போதை இருக்க முடியும்..?




தன்னிச்சையாய்  என் விரல்கள் உன்னை தொடர்பு கொள்ள

நினைத்தாலும்,உழைத்து களைத்து உறங்கத்துடிக்கும் 

உன் உடல்சோர்வே என் உணர்வுகளை உறுத்தி தடுக்கிறது..





பேசி காயப்படுத்தும் பெண்கள் மத்தியில் உன் மவுனம் 

மட்டுமே என் உயிரை உலுக்கி எடுக்கிறது..

ஏதாவது சொல்லுடி ஹனி ப்ளீஸ்..



எந்த பெண்ணிடமும் எல்லை மீறி பழகாத என்னை 

எல்லைகளற்ற ஏகாந்தத்திற்கு எடுத்து சென்றவள் நீ…

ஏமாற்றம் தராதே ஹனி..ப்ளீஸ்..



நிஜத்தில் நீ என்னை விட்டு விலகியே இருந்தாலும்,

நினைவுகளாய் என்னுள் நிறைந்து இருக்கிறாயடி ..

நிழற்படங்களை விடவும் நிஜத்திற்கே உயிர் உண்டு.. 

கருணை காட்டேண்டி ப்ளீஸ்..



உன்னை முத்தமிட்டு மோட்சம் பெற முயன்று ஒவ்வொரு 

முறையும் தோற்றுப்போகிறேன்..நான் மோட்சம் பெற 

தேவதை நீயே தடையிடலாமா..கொஞ்சம் யோசி..

வஞ்சனை இல்லாமல் என்னை நேசி ஹனி..



என்னிடம் ஏன்டா கோபப்பட மாட்ற  என்று

சிணுங்குகிறாய்..பைத்தியக்காரி..

உன் மீதான என் காதலை வெளிப்படுத்தவே எனக்கு 

நேரம் போதவில்லை..

இதில கோபம் வேறயா..?

No comments: