Thursday, November 3, 2011

ஏன் இப்படி ...47

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நாம எப்போ வெட்டியா அரட்டையடிச்சுகிட்டு இருக்கோம்னு 

இந்த மேனேஜர்களுக்கு எப்படி தான் தெரியுதோ..

உடனே வேலை கொடுத்துடுறானுங்க..



ஒரு விஷயத்தை சரியா செய்ய நிறைய தடவை யோசிக்கிறோம்..

ஆனா தவறுகளை செய்ய மட்டும் தடுமாறுவதே இல்ல..


நமக்குப் பிடித்தவர்களின் அலட்சியப்பார்வையை விட 

அவஸ்தையானது எதுவும் இல்லை..


பிரச்சினைகளை உருவாக்குவது நீங்க..

ஆனா தீர்வு மட்டும் யாரோ சொல்லணும்..

என்னப்பா உங்க நியாயம்..



புத்தி சொல்ற எல்லாரும் சொல்றதோட நிறுத்திக்குறாங்க..

அதான் பிரச்சினை..நீங்க முதல்ல அதை 

பாலோவ் பண்ணுங்கடா டே..




ம்..ம்..ஆடிட்டிங்காக வேலை பார்க்ககூடாது..

அனுதினமும் வேலை பார்க்கணும்னு அறிவுக்கு தெரியுது..

ஆனா முடியலையே..



நன்றியோட இருக்குறது எல்லாம் நாலு காலில் நடக்குது..

நன்றி கெட்டது எல்லாம் ரெண்டு காலில் திரியுது..



இப்போவெல்லாம் சென்னைல நடு ராத்திரியில் வீட்டுக்கு 

வெளிய கல்லை எறிஞ்சா ஒண்ணு தெருநாய் மேல படுது..

இல்ல BPO ல வேலை செய்ற யார் மேலயாவது படுது.. #எத்தனை..


வேலை செய்து போர் அடிச்சா பரவா இல்லை..

எனக்கு வேலை செய்யவே போர் அடிக்குதே ஆண்டவா..



தேடி வந்த எந்த பெண்ணையும் நாங்க வேணாம்னு 

சொல்றது இல்ல..ஆனா தேடி வர்ற எந்த பையனையும் 

நீங்க மதிக்கிறதே இல்ல..# ஏன் பொண்ணுங்களா ஏன்..

No comments: