Sunday, November 27, 2011

ஜோக்கூ....54

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




நேற்று அவள் பார்த்த பார்வைக்கு அர்த்தம் தெரியாமால் சென்று 

இன்று ஆபத்தில் மாட்டிக்கொண்டேன்..

#அங்கிளுக்கு ஆபிஸ் லீவுப்பா..




உன் கல்யாணத்திற்கு வந்து ஏமாற்றத்தினால் கண்களில் 

கண்ணீரோடு இருந்தவரை உணரவில்லை என் காதலை.

#கேசரி தீர்ந்து போயிடுச்சாம்ல.


என்னை ஆனந்தத்தில் ஆட வைத்ததும் நீ..

அடி வாங்கி ஓட வைத்ததும் நீ.. 

# அண்ணன் காரனுங்க இல்லாத பொண்ணுங்களா பாருங்க பசங்களா..

அடி பின்றானுங்க.




கண்களை மூடினேன்...கனவில் நீ...

கண்விழித்து பார்த்தேன்...ஹாஸ்பிட்டலில் நான்...

# சனியனே..எந்த பியூட்டி பார்லர் போயி தொலைஞ்ச..





உலகை சுற்ற வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை..

உன்னை சுற்றவே எனக்கு நேரம் போதவில்லை..

#உடம்பை குறைடி பம்ப்ளிமாஸ்...

No comments: