Thursday, November 10, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 49

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



எப்போ பாரு எழவு கொட்டும் காதலியை விட,

அப்போ அப்போ அரவணைக்கும் ஆன்ட்டி 

அற்புதம் தான்..



 

கல்யாணமான ஆண்களை கலாய்க்காதீர்கள்..

நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை மக்களே..அவ்வ்வ்வவ்…

 

நீ ஜொள் விட்ட பிகர் எல்லாம் உன்னை அலைய வைக்கும்..

உன்னை ஜொள் விடும் பிகர் எல்லாம் உன்னை அழ வைக்கும்..

உஷாரா இருக்கணும்..

 

வாழ்க்கை என்பது பெண்கள்.அதில் காதல் என்பது 

அவர்கள் கண்கள்.வெற்றி என்பது அவர்களின் சிரிப்பு.

தோல்வி என்பது வெறுப்பு.


 

ஆணிகள் அதிகம் இருந்தாலும் ஆன்ட்டிகளின் சிரிப்புக்கு 

முன்னால் அத்தனையும் தூசிகள்..

 

நேரில் நாம் பல பெண்களை பார்த்தாலும் நினைவில் 

வந்து நித்திரை கலைக்கும் சில பெண்களே நிரந்தமானவர்கள்..



உண்மையான அன்பை கண்களில் காட்டு.. 

காறித்துப்பிய பிகர் கூட கண் அடிக்கும்..




சில பூக்கள் வெயிலிலும்,சில நிழலிலும் மட்டுமே பூக்கும்.

அதே போல தான் ஆண்களும்..அவர்களின் இருப்பிடம் 

அழகான பெண்களா,ஆன்ட்டிகளா,அயிட்டமா 

என்பதை இயற்கையே நிர்ணயிக்கும்..



அடித்த பின் போதையோ,வாந்தியோ விளைவு உனக்கு 

மட்டுமே என்று இருக்கும்போது சரக்கடிக்க ஏன் 

மத்தவன்கிட்ட SUGGESTION கேட்கணும்..#சியர்ஸ்..



வானவில்லாய் வந்து செல்லும் சில பிகர்களுக்காக 

வானமாய் தாங்கி நிற்கும் ஆன்ட்டிகளை மறந்து விடக்கூடாது..

No comments: