Tuesday, November 29, 2011

ஏன் இப்படி ...51

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



நாளைக்கு நல்லவனா மாறுவது அப்புறம்..அதுக்கு 

முன்னால இன்னைக்கு செய்யுறதுக்கு அனுபவிக்கனும்.

# ஆளாளுக்கு புலம்பாதீங்கப்பா..



பொண்ணுங்க விஷயத்தில மட்டும் எனக்கு தப்பு,சரி,நியாயம்,

அநியாயம் எல்லாமே ஒண்ணுபோலவே தோணுது..

#நான் என்னைக்குத் தான் மாறுவேனோ..




நான் வீட்டில இருந்தாலும் ஆபிஸ்ல இருந்தாலும் 

ஒண்ணு தான்..வீட்டில இருக்கும்போது எப்போதுமே 

பெண்கள் நினைவா இருக்கும்..ஆபிஸ்ல இருந்தா 

அப்போ அப்போ வேலை ஞாபகம் கொஞ்சம் வரும்..



என்னைக் காதலனாக ஏற்றுக்கொள்ள நீ தயாராக இல்லை..

உன்னை வெறும் தோழியாக ஏற்றுக்கொள்ள நான் 

தயாராக இல்லை..விலகி செல்லவும் விருப்பமில்லை..

#என்ன எழவுடா இது..



புரிஞ்சிக்காத பொண்ணை அவசரப்பட்டு காதலிச்சாலும்

இம்சை..புரிஞ்சிக்கிட்ட பொண்ணை காலதாமதமா 

காதலிச்சாலும் இம்சை..#ச்ச..என்ன வாழ்க்கை டா இது..





வர வர நம்ம மக்களுக்கு காதலிக்கிறதுக்கும்,கரெக்ட் 

பண்ணுறதுக்கும் வித்தியாசமே தெரிய மாட்டுது..

1 வருஷத்தில 4 லவ் பண்ணுறாங்க..

#முடியலைடா சாமி..










பொண்ணுங்க என்னை விரும்பியபோது எனக்கு 

காதலிக்கணும்னு எண்ணமே வரலை..இப்போ 

எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சிபோச்சி..எனக்கு 

இப்பதான் காதலிக்கணும்னு எண்ணம் வருது..

#என்னை எல்லாம் என்ன பண்ணலாம்..



அறிமுகமில்லாதவர்களிடம் இருக்கும் ஆரம்பத்தயக்கம் 

போலவே கடினமாக உள்ளது,பிரியமானவர்களின் நிரந்தர 

பிரிவுக்கு முன்னரான சந்திப்பும்..


சில பெண்கள் நம் வாழ்க்கையில் ஒருமுறை வந்து,

பின் வாழ்நாள் முழுதும் வராவிட்டாலும்..மனதை விட்டு நீங்க

மறுப்பது ஏனோ..?# வேற ஏதும் பிகர்கள் 

கிடைக்கலைன்னு அர்த்தமா..? 


எந்தப்புத்துல எந்த பாம்பு இருக்கோனு புலம்பி

தள்ளுறானுங்க..எல்லாப்பூவிலும் தேன் இருக்கும்னு 

ஏன்டா உங்களுக்கு தெரிய மாட்டுது

பச்சிலைப் புடுங்கிங்களா..?

No comments: