Monday, November 21, 2011

தேவதை ஸ்த்ரீயடி நீ

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் உன் 

பார்வையால் உயிரை கடைந்து செல்கிறாயடி..

ஒன்ஸ் " மோர் " ப்ளீஸ்..





உன்மேல் கோபம் கொள்ளும் தருணங்களில் நீ 

காட்டும் குழந்தைத்தனமான முகபாவனைகள் காதலை

தான் அதிகரிக்க செய்கிறது..



என் மேல் நீ காட்டும் கோபம் குழந்தையின் மீது அன்னை கொள்வது 

என்று உணர்ந்தேன்..அதிவேகத்தினால் அடிபட்டு கிடந்த 

என் அருகில் அழுதபடி நீ இருந்த போது..





கணித்ததில் சொல்லிக்கொடுத்தது வினாடிகள் சேர்ந்து 

நிமிடம் ஆகுமென்று..காதல் சொல்லிக்கொடுத்தது 

உனக்காக காத்திருக்கும் வேளைகளில் உன் நினைவுகள் 

சேர்ந்து நிமிடங்கள் ஆகுமென்று..


உன்னை அடைய எதை வேண்டுமானாலும் இழப்பேன்..

ஆனால் என்னையே இழக்க சொன்னால் எப்படியடி..? 






ஊடலின் உச்சத்தில் இனி நம்மிருவருக்கும் இடையே 

ஒன்றுமில்லை என்கிறாய்..உனக்கு எப்படியோ..

நீ இன்றி இனி எனக்கு ஒன்றும் இல்லை தான்..





கனவுகள் எப்போது கருப்பு வெள்ளையில் தான் வருமாம்..

எனக்கு மட்டும் வானவில்லாய்..கனவில் நீ..






நீ எங்கே இருக்கே என்றே தொடங்கும் எனது உரையாடல்கள்..

நீ எப்படி இருக்கே என்றே தொடங்குகிறது 

உனது உரையாடல்கள்..

தேவதை ஸ்த்ரீயடி நீ..








உன்னுடன் சண்டையிட்டு பின் சமாதானம் ஆகையில் 

என் ஈகோ தொலைந்து எளிமையானவன் ஆகிறேன்..

சண்டையிடவேனும் நீ வேண்டுமடி..







நான் மட்டுமே என்று நினைத்த என்னை , 

நாம் என நினைக்க வைத்தவள் நீயடி..

No comments: