Wednesday, November 16, 2011

மாத்தி யோசி ..50

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


காபி டேவில் காதலியோட இருக்கும் நேரங்களை காட்டிலும்,

நண்பர்களோடு நாயர் கடை பெஞ்ச்சில் அமர்ந்து டீ குடிப்பது

தனி சுகம்..#மச்சி..கிங்க்ஸ் வாங்கு..




திட்டோ,பாராட்டோ அது நம்முடைய ஒரிஜினல் கேரக்டரை

பார்த்து வரும்போது சந்தோஷமா ஏத்துக்குங்க..

மத்தவங்களுக்காக வாழ நாம மகாத்மா இல்லை..


ஐ லவ் யூ னு சொன்னா நேரில் பார்க்கும்போது ரெண்டு 

கன்னமும் சிவக்குற அளவுக்கு தர்றேன்னு மிரட்டுறா..

முத்தம் கொடுத்தா கூட கன்னம் சிவக்கும்னு 

தகவல் சொன்னேன்..



எனக்கு நல்லதா தெரியுறது உங்களுக்கு கெட்டதா 

தெரியும்போது..ஏன் உங்களுக்கு கெட்டதா தெரிவது 

எனக்கு நல்லதா தெரியக்கூடாது..

என்னப்பா உங்க நியாயம்..



நீ நல்லவனா கெட்டவனா னு  கேட்குறாங்க..சில பேருக்கு 

நல்லவனா தெரியுற நான்,சில பேருக்கு கெட்டவனா தெரியுறேன்..

நான் எப்பவுமே நானாக தான் இருக்கேன்..

உங்க பார்வையில தான் வித்தியாசம்..





காளிதாசனுக்கு நாக்குல எழுதி கவிபாட வச்சி ரசிச்சதும் 

ஒரு பெண் தான்..எனக்குள்ள காதலை விதைச்சு 

கவிதைகளுக்கு காரணமும் பெண்கள் தான்..




நான் விரும்பின பொண்ணு கூட தான் வாழ முடியலை..

என்னை விரும்புற பொண்ணுங்க கூடயாவது 

வாழ்ந்துட்டு போறேன்..#கமான் கேர்ள்ஸ்..



பிரச்சினைக்கு நான் தான் காரணம்..பிரச்சினைக்கு 
நானா காரணம்..? இந்த ரெண்டுமே வேலைக்கு ஆவாது..
நானும் பிரச்சினைக்கு காரணம்னு உணர்ந்தா 
தான் தீர்வு கிடைக்குது..#அனுபவம்..

நான் பூமியில பிறந்தது உங்க எல்லாருக்கும் பிடிச்சவனா 


வாழ இல்லைடா..என்னை விட்டுடுங்கடா..

எழவு கொட்டாதீங்க ப்ளீஸ்..


இடி இடிச்சா அர்ஜுனா னு சொல்லுவாங்க..

நேத்து ராத்திரி நான் அனுஷ்கா,அமலா பால்னு

அலறுனேனாம்..#முத்திடுச்சோ..ஹ்ம்ம்..

No comments: