Sunday, November 13, 2011

தேவதை திட்டிய தருணம்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



தினம் தினம் என் கனவுகளில் உன்னுடன் வாழ்கிறேனடி..

என் வாழ்க்கையில் வெறும் கனவாய் மட்டும் இருந்து விடாதே..




என்றோ பார்த்தவர்களின் நினைவில் இருப்பதால் வரும் மகிழ்ச்சி,

என் நினைவில் என்றும் இருக்கும் உந்தன் நினைவில் இல்லை 

என்று தெரிந்தவுடன் தொலைந்துபோகுதடி.




என் பிறந்த நாளுக்கு நீ கூறிய வாழ்த்தை விட,

உன் பிறந்த நாளை மறந்ததற்கு நீ தந்த வசவுகளே 

என் நினைவில்..

#தேவதை திட்டிய தருணம் அல்லவா..




என்னை புரிந்துகொண்டு என்னுடன் இருப்பவர்களை விட,

என்னை புரிந்துக்கொள்ளா விடினும்,பிரிந்து செல்லாமல் 

இருக்கும் உன்னை எப்படி இழக்க.




என் தவறுகளை மன்னிக்கும் நீ என்றுமே அன்னை தான்.

என் இயலாமையையும் ஏற்றுக்கொள்ளும் நீ என்றுமே 

ஒரு அற்புதம் தான்.



நான் உன்னிடம் கோபம் கொண்டது IN - TENSION தானே தவிர..

INTENTION அல்ல..


எல்லாருக்கும் என்னை பிடிக்கிற மாதிரி மாத்திட்டு,

இப்போ என்னை பிடிக்கலைன்னு நீ விலகிப் போனா 

என்னடி அர்த்தம் ஹனி..



என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ என்னை 

விட்டு விலகிப்போற..பைத்தியக்காரி..

என் வாழ்க்கையே நீ தான் னு உணராம..



நான் வருத்தப்பட்டாலே நீ அழுவ..இப்போ நான் 

கதறி அழறேன்..கண்டுக்காம போனா என்னடி 

அர்த்தம் ஹனி..



உன் மவுனமே எனக்கு நீ தரும் மிகப்பெரிய தண்டனை 

என்று தெரிந்தும் மவுனமாய் இருக்கிறாய்..

இதற்கு நீ என்னை கொன்று விடலாம்..

No comments: