Saturday, November 12, 2011

மாத்தி யோசி ..49

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




வாடினாலும் வாசம் மாறாத துளசியைப்போன்றே நண்பர்கள் 

என்னை விட்டு ஓடினாலும் என் நேசம் குறைவதில்லை ..

#டே .இருங்கடா .எனக்கு ஒரு பெக் ஊத்துங்கடா ..



ஆரம்பத்தில பெண்களை பிடித்தது போல நடிச்சேன்..

நாளைடைவில அதுவே எனக்கு பழக்கமாகி இப்போ

என் குணமாவே மாறிடுச்சு..

எந்த பெண்ணையும் வெறுக்கவே முடியல..



அன்பு சென்ட்டைப்போல ..நாம ஓப்பன் பண்ணா மட்டும் 

தான் மத்தவங்களுக்கு அது தெரியும் ..

ஆனா வெறுப்பு சரக்கு போல ..

மறைக்க நினைத்தாலும் காட்டிக்கொடுத்துடும் ..




எந்த இடத்தில பெண்கள் எண்ணிக்கை உயர்கிறதோ,

ஆட்டோமெடிக்காக அந்த இடங்களில் பசங்களின் 

பெர்பார்மன்ஸ் குறையும்..

(சீன் போட்டாலும் அது நிச்சயமா சொதப்பும்..)




அதிகமா கொடுக்குறதை விட கொஞ்சமா கொடுத்தாலும் 

அன்போட கொடுத்தா அதிக சந்தோஷப்படுறாங்க.

#அனுபவத்தில கண்டது..


அன்பா பேசுவதால மட்டும் பிகர் மடியாது..

ஆனா அது நிச்சயம் செருப்படியில இருந்துக் காப்பாத்தும்..




என் மீது அக்கறைக்காட்டுவது ஆண்களாக இருக்கும் 

பட்சத்தில் அன்பையும்  ,பெண்களாக இருக்கும் பட்ச்சத்தில் 

ப்யாரை யும் திருப்பிக் கொடுக்கிறேன் ..



யார்கிட்டயாவது ஏதாவது சொல்லணும்னு நெனச்சா 

அவங்க கிட்ட மட்டும் சொல்லுங்க..உடனே சொல்லுங்க..

இல்லைனா வேற யாராவது அதையே ரீமிக்ஸ் பண்ணி

புது வெர்ஷனா போட்டு விட்டுடுறானுங்க..




கண்ணால் காண்பது எதுவுமே உண்மையில்லைங்க..

அடிக்கடி குணம் மாறும் சாதாரணமானவன் நான்..
 

டீ போட்டு கொடுத்தா அது டீக்கடை மாஸ்டர்..

டீ போல போட்டுக்கொடுத்தா அது வீட்டுல 

இருக்க மான்ஸ்டர்..

No comments: