Thursday, November 24, 2011

மாத்தி யோசி ..52

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


சில நொடிகள் சிரிப்பே ஒரு புகைப்படத்தை அழகாக்கும்போது,

எப்பவும் சிரிச்சு கிட்டும்,சிரிக்க வச்சிகிட்டும் இருந்தா 

வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்..யோசிங்கப்பூ..



டே..சோம்பேறி.. 7 மணி வரை என்னடா தூக்கம்னு பசங்க 

தான் எழுப்புறானுங்க..இதே வார்த்தைகளை ஒரு பொண்ணு 

போன் பண்ணி எழுப்பி சொன்னா எவ்வளவு நல்லா

இருக்கும்..#யாராவது வாங்களேன்..ப்ளீஸ்..



நான் நல்லவன்,கெட்டவன் னு சொல்ல நீ யாரு..

பிடிச்சிருந்தா வந்து பழகு..இல்லையா விலகி போயிடு..

ஏன்டா எழவு கொட்டி இம்சைக் கூட்டுறீங்க..



நான் டீ,காபி சாப்பிட மாட்டேன் னு சொன்னா அடடே..

அப்படியா..நல்ல பழக்கம்னு ஆச்சர்யப்படுறாங்க.. 

ஆனா பிராந்தி,விஸ்கி குடிப்பேன்னு சொன்னா 

அடச்சீய்..னு காறித்துப்பறாங்க..

தப்பு யார்மேல இருக்கு..?



 

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதாம்..

போன ட்விட்டு போல உண்மையை சொன்னா பிகர் 

கிடைக்காது போலேயே..


 

காலையில PIRELLI பார்க்கலாம்னு பேஷன் டிவி 

பக்கம் போனா,அதுக்குள்ளே கைரளி டிவி ல அமலா பால்..

மூடு மாறி மல்லுக் கரையோரம் ஒதுங்கிட்டேன்..

மைனா..மைனா..



சிக்கன் சோறுக்கு நல்லா இருக்கோ இல்லையோ 

பீருக்கு சரியான சைட் டிஷ்..ஆகாஹா..ஆகா..


MIB படத்தில வர்ற மாதிரி நினைவுகளை அழிக்க ஏதாவது 

கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்..

#தேவை இல்லாதது மட்டுமே ஞாபகத்தில நிறைந்து இருக்கு..

எந்த கடையில பழைய GF கிடைக்கும்னு தெரியலை..

கிடைச்சா ரெண்டு வாங்கணும்..எத்தனை நாளைக்கு 

தான் மொட்ட பசங்களையே கூட சேர்த்துக்கிட்டு சுத்துறது…



ஆபிஸ் டைம் முடிஞ்சதும் உடனே கிளம்புறவன் வேலை

இல்லாதவனும் இல்ல..தினமும் லேட்டா வீட்டுக்கு 

போறவன் வெட்டி முறிக்கிறவனும் இல்ல..

No comments: