Saturday, September 24, 2011

பார்த்தால் சிணுங்கி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




நீ மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும்போது உன்னை அள்ளி அணைக்க 

மனது துடித்தாலும்,நீ கண்ணீர் விடும் தருணம் உன் அருகில் 

இல்லாததே மனதை கனக்க செய்கிறது..




நான் பார்க்கும்போது மட்டும் அதிகமாய் சிணுங்குகிறாயே..

நீ என்ன பார்த்தால் சிணுங்கியா..

# இது என்ன எழவு CATEGORY னே தெரியல..





வளரும் விதைகள் என்றும் சத்தமிடுவதில்லை..

வெட்டப்படும் மரமே அதிக சத்தமிடுகிறது..

உன் மீதான என் காதல் வளர்ந்தபோது மவுனமாய் இருந்த நான்..

நீ எனை பிரியும்போதே பெருங்குரலெடுத்து அழுகிறேன்..


 

நித்தம் உன்னுடன் உரையாடிவிட்டு யுத்தத்திற்கு பின்னான 

அமைதியாய் உன் ஒரு நாள் மவுனம் என்னைக்கொல்லுதடி..





சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவளிக்க 

போராடும் தாயை போல,என் காதலை உனக்கு ஊட்ட 

நான் போராடுகிறேன்..#அடம்பிடிக்காத ப்ளீஸ்..