Friday, September 30, 2011

மாத்தி யோசி...Part 42

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பழைய நண்பர்களிடம் பேசும்போது தான் நான் எவ்வளவு 

மாறி இருக்கேன்னு தெரியுது..

#ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்..



பெண்கள் பொதுவாகவே அழகு தான்..

என்ன நமக்கு பிடிச்ச பெண்கள் மட்டும் எக்ஸ்ட்ரா 

அழகா தெரியுறாங்க..#தேவதை ஸ்திரீகள்..ஹ்ம்ம்..




ஐஸ்கிரீம் போல அழகா இருக்கும் பெண்கள் , 

வெட்கப்படும்போது செர்ரியோ,இல்ல ஸ்ட்ராபெர்ரியோ வச்ச 

ஐஸ்கிரீம் போல இன்னும் அழகா ஆயிடுறாங்க..




ஆண்கள் வாய்களில் செய்யும் அனைத்தையும் பெண்கள் 

தங்கள் கண்களிலேயே செய்து விடுகிறார்கள்..

பேச,சிரிக்க,கோபப்பட..முத்தமும்,உணவும் மட்டுமே 

பொதுவானது போல.. 


காதலி கிடைக்காத எனக்கு மட்டும் இல்ல,புதுசா கல்யாணம் 

ஆன அத்தனை ஆண்களுக்கும் ஆடி மாத 

சனிக்கிழமைகள் தனிக்கிழமைகள் தான்..


அடுத்தவங்க நமக்கு கொடுக்கும் அன்பை விட அதிகமா 

எதிர்பார்த்தா நம்மை வெறுக்க அதுவே காரணம் ஆயிடுது..

# ஓவர் ஆக்ட் பண்ணாதீங்க பசங்களா..




எல்லாப்பிரச்சினைக்கும் தீர்வு உண்டு..ஏன்னா 

பிரச்சினைகளை உருவாக்குறதே நாம தான..




என்னைப்பற்றி கவலைபடாதவங்களை எண்ணி நான் 

வருந்துவதே இல்லை.என் மதிப்பு தெரியாத அவர்களை 

எண்ணி என்ன பயன்..?




எப்படி பிகர் மடிக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தா..

10 பைசாவுக்கு பிரயோஜனமில்லை..எப்படி எல்லாம் இருந்தா பிகர் 

மதிக்க மாட்டுதுனு கண்டுபிடிச்சா..அப்புறம் ஜல புல ஜக் தான்..




அட..அடுத்தவங்களை வெற்றிபெற வைக்கும்போது நாம 

தானா ஜெயிக்கிறோம்.பிகரை சைட் அடிச்சா அது நம்மை 

திரும்பி பார்க்கும்ல அது போல.

2 comments:

Avargal Unmaigal said...

உங்களின் உளறல்கள் நன்றாக உள்ளது

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

மிக்க நன்றிங்க..