Thursday, September 29, 2011

ஏன் இப்படி ...Part 41

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




அதை செய்யமுடியலைன்னு காண்டுல இருக்கும்போது,

ஏன் மச்சி காண்டா இருந்தா அதை செய்ய வேண்டியது 

தானேனு வெறுப்பேத்துறுவனுங்களை என்ன செய்யலாம்.




உன்னை பிடிச்சிருக்கு சொல்றவங்களை எப்படி மறக்காம 

இருக்கமோ அதே போல உன்னை பிடிக்கலைன்னு 

சொன்னவங்களையும் மறக்க முடியல..




சின்ன வயசுல இருந்து பூஜைகளில் கேட்ட சம்ஸ்கிருத 

மந்திரங்கள் தெரிய மாட்டுது...

லேகா கொய்யா,உசுமலாரிசே எல்லாம் நல்லா மனப்பாடம் ஆகுது..




கழிவுகளையும்,காதலையும் அடக்கி வச்சி இருக்குறவங்க

பக்கத்தில் , நாம இருப்பது ரொம்ப டேஞ்சர்..

# முடியலைடா சாமி..




ஜலதோஷம் பிடிச்சி இருக்குறவன் பக்கத்தில வந்தா ஏன்டா 

இப்படி காணாததை கண்டது போல  பதறி ஓடுறீங்க..

உங்களுக்கும் ஒரு நாள் வரும்டா..




போதையில உளறுவதை கூட தாங்கிக்கலாம்..ஆனா மத்த 

நேரத்தில சொன்னா மொத்திடுவோம்னு , நல்லா தெரிஞ்ச 

மொக்கை விஷயங்களை சொல்வானுங்க பாருங்க..

அதான் அதிகம் வலிக்குது..




எல்லா நல்ல விஷயங்களிலும் எனக்கு ஒரு கெட்ட விஷயம் 

ஞாபகம் வந்து தொலைக்குது...ராம்லீலா - ராஸ லீலா..

# நான் திருந்த வாய்ப்பே இல்லையா..? 


பசங்க கொஞ்சுவதை விட..கெஞ்சுவது தான் 

பொண்ணுங்களுக்கு பிடிக்கும் போல..

#எப்பப்பாரு தொங்க விடுறாளுங்க..




அன்புக்கும்,அரவணைப்புக்கும்,ஆசைக்கும் 

அடிமையாவதை விட...ஆல்கஹாலுக்கே அடிமை ஆகலாம் போல..

என்ன வாழ்க்கை டா இது..




அழகான பிகர்களை மடக்க போயி நான் சொதப்பினதை விட,

கஷ்டப்பட்டு மடக்கின சுமார் மூஞ்சியை வேற 

எவனாவது கொத்திக்கிட்டு போகும்போது தான் 

அதிகம் வலிக்குது..

No comments: