Sunday, September 4, 2011

மாத்தி யோசி ..Part 36

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நானும் பார்த்துட்டேன்..மங்காத்தா..என்னோட கமெண்ட்..

"கோடி கள்னு  வந்துட்டா எல்லா நாயும் கேடி ங்க தான்.." 

மங்காத்தா டா..


பேஸ்புக் கும்,ஜெயிலும் ஒண்ணு தான்..

ரெண்டுலயுமே பொழுது போகாம வெட்டியா

WALL ல கிறுக்கி வைக்குதுங்க..


காதலினால் உடைந்த இதயங்களை ஒட்டவைக்க இருக்கும்

இரு அற்புதங்கள்..RC யும் ஆன்ட்டியும்



ஸ்மைலிகள் ஏதும் இன்றி நீ விழிபேசியால் அனுப்பும் 

குறும்பான செய்திகளையே அதிகம் விரும்புகிறேன்

#மெசேஜ் அனுப்புனா ரிப்ளை கொடுக்கமாட்றாளுங்களே




சகோதரிகள் காதலுக்கு நிச்சயம் சப்போர்ட் பண்ணுவாங்க..

அவங்களுக்கு காதல்னா என்னனு தெரியும்.. 

சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் பசங்கனா 

யார்னு அவங்களுக்கு தெரியும்..




நீ எனக்கு உயிர்னு ஒரு பொண்ணுகிட்ட சொல்லுறதை விட..

அடிக்கிற வெயிலுக்கு நீ எனக்கு தயிர்னு சொல்லிப்பாருங்க..

ஜில்லுனு ஆயிடுவாளுங்க..





நான் நல்லா இருக்கணும்னு வாழ்த்தி, வேண்டிகிட்டவங்களே..

உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்..

உங்க வேண்டுதல் பலிக்கலை..இன்னும் கொஞ்சம் 

நல்லா வேண்டிக்குங்க..




தென்றல் வீசும் வாழ்க்கையை எதிர்பார்த்த எனக்கு உஷா பேன் 

காத்து தான் கிடைக்கும்னா ..வெந்து புழுங்குவதுக்கு பதில் 

வாழ்ந்துட்டு போகலாமே..




எல்லாரும் பொதுவா சொல்ற ஒரே விஷயம்..நான் 

அதிகமா பேசுறேன்னு..என்னங்க பண்ணுறது..

காத்து னா அது வீசணும்..கணேஷ் னா அவன் பேசணும்..

#ஹே..டண்டணக்கா..டணுக்குனக்கா..



அண்ணன்காரனுங்க இருக்குற பொண்ணுங்க கூட ஜாடை 

மாடையா சைகையில பேசுறதுக்காக வாவது அடிக்கடி 

DD நியூஸ் பார்க்கணும் போல..#முடியல..

No comments: