Friday, September 9, 2011

ஏன் இப்படி ...Part 34

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



அது ஏனோ பார்த்தவுடன் ஆண்களை அண்ணா என்று 

அழைக்கும் பெண்கள் கூட என்னை அப்படி கூப்பிடுவதில்லை..

# மாமனை பார்த்தாலே ஏதோ பண்ணும் போல..




மனைவி - என் மேல உங்களுக்கு அன்பே இல்லை..

கணவன் -அப்போ நம்ம குழந்தைகளை நான் என்ன கூகிள் ல 

இருந்தா டவுன்லோட் பண்ணேன்..லூசு.




சூடு,சொரணையே இல்லைனாலும் இருக்குற மாதிரி காட்டுறது 

காதலில் மட்டுமே சாத்தியம்..# EGO




நல்லவேளை நான் கோவைல வேலை பார்க்குறேன்..

சென்னையில இருந்தா நண்பர்களை பார்க்க அடிக்கடி

போகணும்..பெட்ரோல் விலையை விட போன் 

பில் அதிகமாவதில்லை..




பாம்புக்கு பல்லில விஷம் னா..பெண்களுக்கு பார்வையில..

# என்னமா லுக்கு விடுறாளுங்க..



ஹ்ம்ம்..என்ன தான் ஸ்லோ பாய்சனை கொடுத்தாலும் 

கொஞ்சுற நேரத்தில ஸ்வீட் பாயசத்தை தர்றதும் அவளுங்க தான்..


வெறிக்க வெறிக்க பார்த்தும் அலட்டிக்கிட்டு போற 

பொண்ணுங்களை விட, எதிர்பாரா நேரத்தில வந்து 

பொண்ணுங்க அண்ணான்னு கூப்பிடுறப்போ தான் 

பசங்களுக்கு BP வருது.




என்னோட வெறுப்பை யார்கிட்டயாவது காட்டினா எந்த 

பலனும் இல்லைன்னு என் அன்பை காட்டினா ஏன் தான் 

இந்த பொண்ணுங்க மதிக்க மாட்றாங்களோ..




மதியம் 1 மணிக்கு மொட்டை மாடியில மண்டை காயுற 

வெயில்ல நின்னுகிட்டு தம்மடிக்க வைக்குற 

ஆன்ட்டியை என்ன செய்ய..?



பொத்துகிட்டு வர்றது ரெளவுத்திரமா..? நான் 

சுண்டு விரலைக்காட்டுவோமே அதுன்னு நெனச்சுட்டேன்..

No comments: