Saturday, September 3, 2011

ஏன் இப்படி ... Part 31

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





வேலை செய்யுற மாதிரி எவ்வளவு நேரம் வேணும்னாலும் 

நடிக்க முடியுது..ஆனா பெண்களை பிடிக்காதமாதிரியும்,

பார்க்காத மாதிரியும் சில நொடிகள் கூட நடிக்க முடியல..

ஹ்ம்ம்...




தம்மடிச்சுட்டு வந்தா வாய் நாறுதுன்னு சொல்றானுங்க..

சிகரெட்டுல இருந்து வேற என்ன சிங்கப்பூர் சென்ட்டு 

வாசனையாடா எதிர்ப்பார்க்குறீங்க..




சனிக்கிழமை சாயங்கால வேளை ரொம்ப ரம்மியமா இருக்கு..

மொட்டை மாடி நிலா..சில்லுனு காத்து..ஆனா நான் மட்டும் 

தனியா காண்டுல.. கருமம்..கருமம்..



TATO NANO னு பேரு வச்சதுக்கு பதிலா AUTO NANO னு 

பேரு வச்சிருக்கலாம்..ஒரு பாலம் ஏறுவதுக்குள்ள பப்பரப்பான்னு 

போகுது.. டேய்..சவுண்டை குறைங்கடா..

டேய்..பக்கத்தில வர முடியல..




ஜொள்ளின் அடையாளம் லுக்கு..

சொம்பின் அடையாளம் ஜிங் சக்கு..

# ஆபிஸ்ல சத்தம் காதை கிழிக்குது பா..




தன் மேல குத்தம் சொன்னா வாதிடும் நாம்..

அடுத்தவன் தப்பைப்பத்தி பேசும்போது நாட்டாமையா 

மாறிடுறோம்.. ஏன் சார்..






அப்ரைசல் முடிஞ்சபின்னரும் அகாலநேரத்தில் ஆபிசில் 

ஆணி புடுங்கும் என்னை எல்லாரும் ஒரு 

மாதிரியா பார்க்குறாங்க..ஏன்டா..ஏன்..



வியர்வை வாடையை தவிர்ப்பதை விட சிகரெட் வாடையை 

தவிர்க்கவே பெரும்பாலான ஆண்கள் 

பெர்பியூம் பயன்படுத்துகிறார்கள்..

# சட்டையை மோப்பம் பிடிக்கிறாளுங்க சார்..




நான் ராஜேஷை போல அழகு இல்லை,பணக்காரன் இல்லை,


என்கிட்டே கார் இல்லை..ஆனா நான் உன்னை 


உண்மையா காதலிக்கிறேன்..


சரி..சரி..மீ டூ..அவனை பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லு..




எப்பவுமே கிடைக்குற விஷயத்தை எனக்கு ரொம்ப 


பிடிச்சுருக்குன்னு சொல்லிட்டா போதும்..


அப்புறம் கிடைக்கவே மாட்டுது..


ஏன் பொண்ணுங்களா இப்படி பண்றீங்க..

No comments: