Sunday, September 18, 2011

மாத்தி யோசி ...Part 41

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



காதலிச்ச பிகரை கழட்டி விட நினைக்கிறது,தீப்பிடிச்ச ப்ளேன்ல 

இருந்து பாராசூட்டை மாட்டிகிட்டு பாறைக்கு நடுவுல 

குதிக்கிறதுக்கு சமம்…உஷாரா இருக்கணும்..




பொய்யையோ அல்லது உண்மையையோ மட்டுமே பேசினா 

ஒரு பொண்ணும் சீண்ட மாட்டுது..கலந்து கட்டி அடிச்சா தான் 

காலம் தள்ள முடியும் போல..




தனித்துவத்தோடு இருக்குறவன் தான் எல்லோராலையும்

விமர்சிக்கப்படுறான்..கூட்டத்துல கோவிந்தா போட

நான் எதுக்கு சார்.. 




பெண்களின் கோபப்பார்வைகள் கற்களை போலத்தான்..

அதை உங்கள் உறவுக்கு சுவராய் பார்ப்பதும்,

பாலமாய் மாற்றுவதும் உங்கள் திறமை பசங்களே..




எதிர்ல வர்றது பிகரா இல்லை ஆன்ட்டியானு தெரியாதவன் 

இருட்டுல பார்த்தது பாம்பா இருந்தா என்ன..

கயிறா இருந்தா என்ன..

காதலிச்சா சின்ன சின்ன விஷயங்களும் சந்தோஷம் கொடுக்கும் 

என்பது போய்,காதலிச்சா கடலே ஊருக்குள்ள வந்தாலும் 

அமைதியா இருக்குற யோக நிலை வந்துடுது.


ஆடி மாதத்தில் அலாரம் வைத்து 5 மணிக்கு பசங்க எழுவது

சத்தியமா ஆபிஸ் , காலேஜ் போக இல்ல..அடுத்த வீடுகளில் 

ஆன்ட்டி இருக்கலாம்..#பிகருங்க கோலம் போடுறது பழைய 

பேஷன் ஆச்சே.


பக்கத்து வீட்டு ஆன்ட்டி காலையிலேயே சாம்பிராணி 

புகையோட பால்கனிக்கு வந்தா,நான் சிகரெட் 

புகையோட..அதனாலென்ன..

புகை வந்தா போதாதா..?


ஆண்கள் பொய் பேச முதல் காரணமே பெண்கள் தான்..

கேட்கும் கேள்வி - நான் அழகா இருக்கேனா டா..?


பேச்சுலர்ஸ் ரூம்ல எது இருக்கோ இல்லையோ இந்த நாலும் 

கண்டிப்பா இருக்கும்...

சீட்டுக்கட்டு,சிகரெட் துண்டு,சரக்கு பாட்டில்,அழுக்கு துணிகள்.

No comments: