Tuesday, September 20, 2011

பொய்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



உன்னுடன் பேசமாட்டேன் என்பதே நாம் ஊடல் கொண்ட 

அனேக நேரங்களில் நீ பயன்படுத்திய

வார்த்தைகள்..உண்மைதான்..

மீண்டும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும்

எங்கே பேசினோம்..?





புல்லாங்குழலின் உள்ளே நுழைந்து இசையை உயிர் 

பெறும் பாக்கியம் இழந்த காற்றை போல..

உன் ஸ்பரிசம் இன்றி தினம் தினம் சாகிறேனடி..




உன்னுடன் இருந்த நேரங்களின் அருமை எனக்கு

புரியவில்லை..அவைகள் நினைவுகளாக மாறி

வதைக்கும் வரை..





உனக்காக நீ என்னுடன் சண்டையிட்டாலே நான் 

விலக மாட்டேன்..எனக்காக நீ என்னுடன் சண்டையிடும் 

போதா விலகி விடுவேன்..




பொய் சொல்வது எனக்கு புதிதல்ல..

ஆனாலும் என்னை நானே வெறுக்க வைத்த பொய்..

உன்னை பிடிக்கவில்லை என்றது தான்..

1 comment:

மயில் றெக்க said...

பொய் சொல்வது எனக்கு புதிதல்ல..

ஆனாலும் என்னை நானே வெறுக்க வைத்த பொய்..

உன்னை பிடிக்கவில்லை என்றது தான்..

nice one machhci