Wednesday, September 21, 2011

ஏன் இப்படி .... Part 38

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அழகான பொண்ணுங்க எல்லாம் அடக்க ஒடுக்கமா போனா 

அட்டு பிகருங்க எல்லாம் ஆட்டம் போட தான் செய்யும்..

தேவதைகளே தைரியமா வாங்க..தேவாங்குகளை எல்லாம் 

நாங்க SHIFT +DELETE பண்றோம்.




என்னோட பழக்கவழக்கங்கள் பிடிக்காம காதலிச்சவ

விட்டுப்போனா..இப்ப அது தான் பிடிச்சிருக்குன்னு 

சொல்லிக்கிட்டு என்மேல அவளைவிட அதிகமான 

காதலோட சில பெண்கள் வராளுங்க..

வாத்சாயனா.. இதென்ன விளையாட்டு..




நாங்க பார்க்கும்போது கண்டுக்காம போறது கூட

பரவாயில்லை..அதுக்கப்புறம் பார்க்க கூடாத எதையோ

பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறீங்களே 

அதத்தான் பொண்ணுங்களா தாங்கிக்க முடியலை.. வீ பாவம்.




அழகான தங்கை இருக்கும் அறுவையான அண்ணன்களையும்

" அப்புறம் மச்சான்.." என அழைக்க நேரிடும்போது தோணுது..

ச்ச..என்ன வாழ்க்கைடா இது..




பெண்கள் மட்டும் இல்லையென்றால் ஆண்களுக்கு போட்டி 

போடுவதே மறந்து போயிருக்கும்..

# ஒரு பிகரை கட்டம் கட்ட கூட்டம் கூட்டமா வரானுங்க.. 


நம்மில் பலரும் அவரவர் வட்டார மொழியை 

அடுத்தவர்களை திட்டுவதற்க்கே அதிகம்

பயன்படுத்துகிறோம்...என்னமோ போங்க..




நான் மத்தவங்களிடத்தில பொய்யான அன்பை 
வெளிப்படுத்துவதால,என்மேல உண்மையா அன்பு 

வச்சிருக்குறவங்களை கூட சந்தேகத்தோடையே பார்க்குறேன்..




ஸ்டார் ஹோட்டல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ் னாலே கலர் கலரா 

கொடிகளை பறக்க விடணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா..

# கண்ணு கூசுற அளவுக்கு கொன்னு எடுக்குறானுங்க சார்..




தான் நினைப்பதே சரி,மத்தவங்க எல்லாம் இப்படி தான்

யோசிப்பாங்கன்னு அவனுங்களாவே முடிவு பண்ணி மூச்சு 

திணற திணற அடிக்கிறவங்களை என்ன பண்றது.



வீட்டுல இருக்குற நாட்களில் மட்டும் TV இல மொக்கை 

படங்களா போடுறானுன்களே..ஏன்டா..ஏன்..

No comments: