Monday, September 5, 2011

ஏன் இப்படி ... Part 32

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


அட..ச்ச..சில நேரங்களில் பெண்களுக்கு SMS ல சொல்ல 

வேண்டியதை ட்வீட் டா போட்டுடுறேன்..

# நல்லவேளை அவளுங்க எவளும் இங்க இல்லை..




காதலுக்கு இருக்குற கெட்ட குணமே தேவைப்படும்போது

கிடைப்பதில்லை..மாறாக தேவையில்லாத நேரத்தில் 

சரியாக சிக்க வைக்கிறது.




பசியோடவும்,கொஞ்சம் பயத்தோடவும் இருக்கும்போதும்,

பாக்கெட்ல பணம் இல்லாதப்பவும் கண்டமேனிக்கு யோசிக்க 

தோணுவது எனக்கு மட்டும் தானா..




நாம பார்க்கும் பிகர் கண்டுக்காம போனாலும் பின்னாலையே 

போக பிடிக்குது.நம்மை பார்த்த பிகர் விலக ஆரம்பிச்சதும் 

மனசு துடிக்குது..




காதலிச்ச பொண்ணு நாம வேலை பார்க்குற அதே ஊரில் 

கல்யாணமாகி இருக்குறது சண்டையை விலக்கி விட 

போயி செவுள்லையே அடி வாங்கிகிட்டு வர்ற மாதிரி..

#நாம ஒண்ணுமே பண்ணலைனாலும் கொடுமைடா சாமி..




நான் காதலித்த பொண்ணுங்க என்னை விட்டு விலகுவதை விட..

என்னை காதலித்த பெண்கள் விலகுவதை தான் 

தாங்க முடியல..#அவசரப்பட்டுட்டனோ..


முன்னாள் காதலியோட கல்யாணத்துக்கு போயி..

கஷ்டப்பட்டு போட்டோ வுக்கு சிரிச்சுகிட்டே போஸ் 

கொடுத்து இருக்கீங்களா..அதை விட கொடுமையான விஷயம் ..

இன்னும் எத்தனை கல்யாணத்துக்கு தான் நான் போறது.. 




இன்னமும் பஸ்,தியேட்டர் சீட்ல BUBBLE GUM ஒட்டி வைக்கிற 

பிக்காலிங்க இருக்குறானுங்களா..? மூட்டை பூச்சி 

தொல்லை கூட தீர்ந்துடும் போல..இந்த முட்டாப்பசங்க 

தொல்லை தீரலையே..




அவளுங்களுக்கு பிடிச்சு இருந்தா தப்பே செஞ்சாலும்

மன்னிச்சுடுறாளுங்க..பிடிக்கலைனா என்ன தப்புனே நமக்கு 

தெரியாம இருந்தாலும் போட்டு தாளிச்சுடுறாளுங்க..

#ஏன் இப்படி..
 


பெண்கள் சிரிப்பதை காட்டிலும்,சிணுங்குவதிலே தான் 

அதிக அழகு..சிலிர்க்க வைக்கிறாளுங்க போங்க..

No comments: