Saturday, May 21, 2011

ஏன் இப்படி ...Part 19

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


வெளிநாட்டு நகரங்களின் தெருக்களில் கழைக்கூத்தாடிகள் 

போல கலர் கலராக உடை அணிந்து நம்மூரு ஹீரோ 

ஹீரோயின்கள் டூயட் பாடுவதை எப்போ நிறுத்துவாங்க..

# கண்ணை கட்டுதுடா சாமி.


 
நான் குடிக்கிறேன்னுதெரிஞ்சி என்னை ஒருமாதிரியா 

பார்க்கிறவங்களை விட நான் குடியை விட்டுட்டேன்னு 

சொன்னதும் பசங்க பார்க்கிற பார்வை இருக்கே..

# திருந்த விடமாட்டானுன்களே..  



வீட்டில எத்தனை தடவை கண்ணாடியை பார்த்து 

அலங்காரம் பண்ணிக்கிட்டு வெளியே கிளம்புனாலும்..

ரோடு ஓரத்தில நிக்குற கார் , பைக் கண்ணாடியை பார்த்து 

தலை சீவுவதை விடமுடியலையே..



அது ஏன் நெறைய பொண்ணுங்க பசங்களை பார்க்கும்போது

மட்டும் இல்லாத காதோரத்து முடியை இழுத்து 

பின்னாடி விடுறாளுங்க..




ஷாப்பிங் மால்களுக்கு போயி கண்டபடி செலவு பண்ணாலும் 

பைக் பார்க்கிங்குக்கு பணம் குடுக்கும்போது மட்டும் ஏன் 

அதிகமா வாங்குறானுங்கன்னு  தோணுது..

1 comment:

மதுரை சரவணன் said...

எனக்கும் கண்ண சுத்துதுங்க..பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்