Sunday, May 1, 2011

திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..(காலேஜ் கானா.. )

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..

திட்ட வேணாம்..முறைக்க வேணாம்..

அழகு பொண்ணே..அனிதா..

உன் பின்னாலேயே அலையுறேனே..

எனக்கு ஒரு முத்தம் தா..

தாலிக்கட்டி நான் கூட்டிப்போறேன்..

டவுரி உனக்கு நானே தாரேன்..

சிரிச்சி பேசும் சிலையே..

உன்மேல நான் கொண்ட காதலுக்கு..

ஏது இங்க விலையே..


கண்டு சொன்னான் கவிஞன் அன்றே..

பெண்கள் செய்தால் தீதும் நன்றே..

நீ தேவதையின் மகளா..

இல்ல தேவலோக ரம்பையை எடுத்து..

செய்து வைத்த நகலா..


அழகுல அவ கிளியோபாட்ரா..

சிரிப்பினில் என்னை புரட்டிப்போட்றா..

என் உசுருக்குள்ள நீயே..

இப்போ உன்னால நான் உறைஞ்சு நிக்கிறேன்..

உயிர் கொடு தீயே..

கோபப்பட்டா கண்களில் மிர்ச்சி..

கொஞ்சி பேசி என்னை குளிரவும் வச்சி..

ஓரக்கண்ணில் நீ பார்த்தா..

அடி மூர்ச்சையாகி விழுந்த என்னுள் நீ..

கலந்துட்ட மூச்சு காத்தா..


என்கிட்டே நீ பேசவும் மாட்ற..

மனசுக்குள்ள காதலை பூட்ற..

உனக்கு இன்னும் ஏன்டி தயக்கம்..

நீ ஒதுங்கி ஒதுங்கி போறதால தான்

உன்மேல ஒரு மயக்கம்..


மரணமில்லா வாழ்க்கைக்கு அமுதம்..

தேவை இல்லை உன் அருகாமை போதும்..

பொண்ணு கேட்டு வரவா..

என் ஆயுளோட மீதி நாட்களை

உனக்காகவே தரவா..


No comments: