Saturday, May 14, 2011

ஏன் இப்படி ...Part 17

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கனவுல கவிதை போல ஒரு தேவதை வருவான்னு பார்த்தா..

கடன்கார கஸ்டமரும்,எழவெடுத்த எக்ஸ்டெர்னல் 

ஆடிட்டரும் வர்றானுன்களே.. 

# முத்திடுச்சோ.



பிரபலமான பெண்களின் கணவன்மார்களை பற்றி 

அதிகம் வெளியே தெரிவதில்லையே..

ஒருவேளை நாட்டாமை பட மிக்சர் தின்கிற கிழவனை 

போல இருப்பார்களோ..# சூ.கொ.



ஒரு பிரச்சினை வரும்போது அதை தீர்ப்பதை விட்டுவிட்டு

அதற்கு காரணமாகவே இல்லாத நம்முடைய சிறு தவறையே 

திரும்ப திரும்ப குத்திக்காட்டுறானுன்களே.. 


பிரச்சினைல மாட்டிக்கிட்டு எவன்கிட்டயாவது போயி 

தீர்வு கேட்டா நான் அப்பவே சொன்னேன்ல னு

ஆரம்பிக்குறானுன்களே..ஏன்டா ஏன்..


லீவு  போட்டு ஊருக்கு போனா போன் பண்ணி

" டிஸ்டர்ப்  பண்ணிட்டேன்னு நெனைக்கிறேன்..மன்னிச்சுக்குங்க "னு

சொல்லிட்டு அரை மணி நேரம் கண்ட கருமாந்திரத்தில

எல்லாம் டவுட் கேக்குறானுன்களே ஏன்டா ஏன்.. 

No comments: