Thursday, May 19, 2011

ஜோக்கூ...Part 39

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஒவ்வொரு உயிருக்கும் ஒருமுறை மட்டுமே மரணம்..

உன்னை காதலித்தபின்பு எனக்கு ஒவ்வொரு நிமிடமும் மரணம்..

எழவு மவளே..உனக்கு மொத்தம் எத்தனை சொந்தக்காரனுங்கடி..





நீ வீட்டில் இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தியது

உன் தெரு..

ஒரு பையனை கூட காணோம்..

( த்தூ..பொறுக்கி பசங்க..)





முயன்றால் முடியும் என்று யார் சொன்னது..

எவ்வளவு முயன்றும் என்னால் மடிக்க முடியவில்லை..

6 ம் நம்பர் வீட்டு அடங்காப்பிடாரி ஆன்ட்டியை..





அட கடிகாரமே..நீ எனக்கு எதிரியா..

அவளுக்காக காத்திருக்கும்போது மெதுவாகவும், 

சேர்ந்து இருக்கும்போது சீக்கிரமாகவும் ஓடுகிறாயே..

சனியனே..நான் டாவடிக்கிறதுல உனக்கு என்ன காண்டு..





ஆழமான காதல் என்பது அடிவயிற்றுக்கு கீழ் 

உள்ளது அல்ல.. 

ஆழ்மனதில் இருப்பது..





திருமண பத்திரிகையில் உனது பெயருடன் 

எனது பெயர் வர ஆசைப்பட்டேன்.. 

ஆனால் இன்றோ அட்டையில் நான் மட்டும் தனியாக.. 

மயிரைக்கூட மொய் வைக்க மாட்டேன்..போடி..

No comments: