Thursday, May 26, 2011

ஜோக்கூ...Part 41

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நான் தூங்கி பல நாட்கள் ஆனது..காரணம் உன் 

அண்ணன் செய்த எச்சரிக்கை.. கனவுல அவளை பார்த்தாலும்

கை,காலை வெட்டிடுவேன்..

உன்னை காதலிச்சதுக்கு காசு கொடுத்து 

எங்காவது போயிருக்கலாம்..



கண்ணாடி கூட்டுக்குள் காம களியாட்டம்..

கடிகாரம்.. 

( அட ச்சே.. ஏன் இவ்வளவு கேவலமா யோசிக்கிறேன்..)



கை அளவு இதயத்தில் மலையாய் நீ..

உடம்பை கரைச்சு தொலை குண்டு பூசணியே..

( கொழு கொழுன்னு இருந்தா நீ சின்ன வயசு குஷ்பூ வா..?)




நீ என்மேல் உரசியவுடன் தீப்பற்றி எரிந்தது என் மனம்..

நீ போனபின்பு காணும் என் பணம்..

அடி திருட்டு சிறுக்கி..பிக்பாக்கெட்டாடி நீ..




சிகரெட் புகைப்பதை விடவேண்டுமென்றே 

ஒவ்வொரு முறையும் யோசிக்கிறேன்..

சிகரெட் புகைத்துக்கொண்டே..




காத்திருந்து வளர்த்த காதல் காணாமல் போனது..

கல்யாணம் செய்தவுடன்..

( உங்க மனைவி ஆன அப்புறமும் லவ் பண்ணுங்க சார்..)

No comments: