Tuesday, October 4, 2011

ஏன் இப்படி ...Part 43

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ஒரு பெண்ணை புரிந்துகொள்வது என்பது 1 GB பைலை 2 Kbps 

வேகத்தில டவுன்லோடு பண்ணுறது போல..

95 % complete ஆன உடனே Error வரும்..

#முடியலைடா சாமி..கொடுமை.




நீ தப்பா செஞ்சுட்டேன்னு சொல்லிக்காமிச்சுட்டு,அடுத்த தடவை 

அதை செய்யும்போதும் மச்சி..நீயே செய்டான்னு 

சொல்றவனுங்களை என்ன பண்ணலாம்..



எதிர்க்கருத்தே சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறவங்க 

ஏன்யா அடுத்தவன் கிட்ட ஆலோசனை பண்றீங்க..

நீங்களே செஞ்சுட்டு போயிட வேண்டியது தானே..






4 பேரு ஒரே கருத்தை சொல்லும்போது அது பிடிக்கலைனாலும் 

ஆமாம் போடுறானுங்க..அதை எதிர்த்து நம்ம கருத்தை 

சொன்னா அத்தனை பேரும் ரவுண்டு கட்டுறானுங்க..

ஏன்டா ஏன்..




வெள்ளிக்கிழமை ஆனா பெரும்பாலான வீடுகளில்

சாம்பாரும்,சண்டே ஆனா நான் வெஜ் ஜும்..ஏதும் சட்டமா..?




கோயம்புத்தூர் ல மருந்துக்கடைகளும்,பேக்கரிகளும் தான் 

அதிக அளவில இருக்குனு எனக்கு மட்டும் தான் தோணுதா..?




சுவரோரம் ஒரு வண்டியை நிப்பாட்டி வச்சிருந்தா போதும்,

உடனே நம்ம மக்கள் போயி அந்த காம்பவுண்டு வாலுக்கு 

வாட்டர் வாஷ் பண்ணிடுறாங்க..#ஏன் மக்களே..


காதலை மதிக்கிறவனுக்கு அது கிடைக்கிறது இல்ல..

பொழுது போக்கா பண்ணுறவனுக்கு ஏகப்பட்டது வந்து மாட்டுது..

ஏன் இப்படி..




ஏதோ சொல்லனும்னு நெனச்சேன்..மறந்துட்டேன்னு சொன்ன 

உடனே எதிர்ல இருக்கவன் கேட்குற முதல் கேள்வி..

என்ன சொல்லனும்னு நெனச்ச..? # ஏன்டா இப்படி..




நம்மீது அக்கறை கொண்டவர்களை அலட்சியப்படுத்துவதே 

அவர்களுக்கு நாம் கொடுக்கமுடிந்த மிகப்பெரிய தண்டனை..

அதுவே அவர்களிடமிருந்து வரும்போது நாம் அனுபவிக்கும் 

மிகப்பெரிய வலி..

2 comments:

Anonymous said...

அதானே...ஏன் இப்படி...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தெரியலியே மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லேன்...