Friday, October 28, 2011

சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 46

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பெண்களுடன் பழகுவது ஒரு கலை..

அதை கற்று அறிந்த எவனும் எதற்கும் யோசிக்கிறதே இல்லை..

#எல்லாம் தானா நடக்குது.


பெண்கள் இருக்கும் ஆண்களின் வாழ்க்கையில் சில 

முட்கள் இருக்கலாம்..ஆனால் அவர்கள் இல்லாத ஆண்களின் 

வாழ்வில் ஒரு பூ கூட இருக்க முடியாது..

#எனக்கு பிஞ்சுக்கே வழி இல்ல..




ஆன்ட்டிகள் அதிகம் இருக்கும் வீதிகள்,அன்பாலும் 

அழகாலும் நிறைந்தது..#தேவதை வீதிகள்..




வேலை சில நேரம் சரக்கை மறக்க செய்கிறது..

சில சரக்குகள் வேலையையும்,வேதனையையும் மறக்க செய்கிறது..

#RC அடிச்சா இல்லை வலி.


வாழ்க்கையில ஆயிரம் ஆணிகள்,அடிகள் இருக்கும்…

அவைகள் இருந்தால் தான் ஆன்ட்டிகளையும்,RC யையும் முழுதாய் 

உணர முடியும்..#இதுக்கு போயி அலட்டிக்கலாமா…?



நம்பிக்கை,அன்பு ரெண்டையும் எந்த அளவுக்கு அதிகமா,

ஆத்மார்த்தமா வச்சி இருக்கமோ,அவங்க அதை 

உடைக்கும்போது ஆழமான,அழுத்தமான வலி ஏற்படும்.


பிகர் மடிக்க பசங்களுக்கு பைக் மட்டும் இருந்தா போதாது..

விடுற லுக்குல ஒரு கிக்கு வேணும்..

பேக்கு போல பார்த்தா பிகர் போயிடும் காத்தா…




ஊளையிடும் நாய்களுக்கு மற்றவர்கள் உறங்குவதை பற்றி 

எந்த கவலையும் இல்லை..

#இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்லை..

நீங்களா எதையாவது நெனச்சு குழம்பாதீங்க..


LOVER ரிடம் LOYALTY இல்லாமல் போகும்போது எல்லாமே

OVER ஆகி விடுகிறது..

#நேத்து அடிச்ச சரக்கு எனக்கு ஓவராயிடுச்சி போல.




அன்பை பெற ஈகோவை இழந்து விடுங்கள்..

இல்லையெனில் இருவர் ஒருவர் ஆகாமல் நாலு 

பேராகி நாசமா போக வேண்டியது தான்..

No comments: