Thursday, October 27, 2011

ஈகோ காதல்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



என் மேல் கோபம் இருந்தால் நேரில் பார்க்கும்போது 

அடித்து கூட விடு..அலட்சியப்படுத்தாதே..

வலிக்கிறதடி..




மேக  மூட்டமாய் உன் நினைவுகள்..

எந்நேரமும் மழை வரலாம்..

என் விழிகளில்..




ஒருவருக்கொருவர் நாம் யாரென காட்ட ஈகோ கொண்டு 

பேசாமல் இருந்தோம்.நம்மை தனித்தனியே தவிக்கவிட்டு 

தான் யாரென காட்டிவிட்டது காதல்.




என் வெற்றிடம் நிரம்ப உன் தெற்றுப்பல் 

சிரிப்பு ஒன்றே போதும்..



என் வாழ்வினில் சிறந்த நாள் என்பது 

உன்னுடன் இருந்த நாட்களே..




உன்னிடம் என் கோபத்தை காட்ட சிறந்த வழி 

உன்னை முத்தமிடுவதே..சந்தோஷத்தைக்காட்ட சிறந்த வழி..

அதுவும் அதே தான்..

# நான் ஏன் திருந்தணும்...? 


வலிகளை அடக்கி தாயின் முகம் கண்டதும் வீறிட்டு 

அழும் சேயைப்போல..என் கவலைகளும் காதலும் 

உன் குரல் கேட்கும்போதும்,முகம் பார்க்கும்போதும் 

பீறிட்டு பொங்குதடி..

 

உன்னை எதனுடன் ஒப்பிடுவது என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பம்..

நீ தான் ஒவ்வொரு  முறையும்  உனக்கே உரித்தான 

அனுபவங்களை தருகிறாயே..

 

உன் சிரிப்பினில் என்னை செயலிழக்க செய்கிறாய்..

பின்பு முத்தம் தந்து உயிர்ப்பிக்க செய்கிறாய்..

படைத்தலும்,அழித்தலும் கடவுள் செயல் எனில்..

காதலி நீயே என் கடவுள்..

அன்பே சிவம் போல எனக்கு காதலே கடவுள்..


காதலின் அடையாளமாய் கவிதைகளை சேமித்து 

வைக்க சொல்கிறாய்..பைத்தியக்காரி..என் காதல் தான் 

உன் உருவில் என் வாழ்க்கை  முழுதும் 

உடனிருக்கப்போகிறதே..பிறகென்னடி பம்ப்ளிமாஸ்..

No comments: