Tuesday, October 11, 2011

நான் அழுத கணங்கள்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் " போனை வச்சிடவா " னு 

கேட்டபின்னும் ஏதேனும் பேசுவாயோ எனக் 

காத்திருப்பதே வாடிக்கையாகி போனது..



எந்த செலவுமின்றி நீ தரும் ஒற்றைப்புன்னகை..

என்னுள் ஏகப்பட்ட எனர்ஜி தருவது ஏனோ..? 

# GIRLS ARE THE SECRET OF MY ENERGY


நீ அழுத கணங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்..

ஆனால் நான் அழுத கணங்கள் அத்தனையும் 

நீ அழுத கணங்களே..






எனக்கான விருப்பங்களை என்னைவிடவும் நன்றாய் 

தெரிந்து வைத்திருப்பது நீ மட்டுமே..


பேசும் வார்த்தைகள் அத்தனையும் மன எண்ணங்களின் 

வெளிப்பாடே என்பது உண்மையானால்..

உன் பெயரை மட்டுமே நான் 

உச்சரித்துக்கொண்டிருக்க வேண்டுமா..?




விலகிச்செல்ல நினைக்கும் என்னை நீ வெறுக்காமல்

இருக்கும்போது தான் வேதனை அதிகமாகிறது..

No comments: