Sunday, October 2, 2011

ஏன் இப்படி ...Part 42

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


காலையில ப்ரைவேட் ஸ்கூல் போற குழந்தைகளை

பார்க்கணுமே..ஸ்கார்ப்,டை,ஓவர் கோட்,ஷூ,ஷாக்ஸ் னு 

கேக் கை பேக் பண்ணி அனுப்புற மாதிரி அனுப்புறாங்க..



ஸ்கூல் பஸ்,வேன் ஓட்டுற டிரைவர்கள் எல்லாம் எப்பவுமே 

குவார்ட்டர் அடிச்ச குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிக்கணும்னு 

ஏதாவது சட்டமா..? 

ஒருத்தனும் குழந்தைகளிடம் சிரிக்க மாட்றான்..




கல்யாணம் வைக்கிறவனுங்க மாசத்தோட முதல் ரெண்டு 

வாரத்தில வைங்கடான்னா..மாசக்கடைசியில தான்

வைக்கிறானுங்க.# எனக்கு மட்டும் ஏன் இப்படி..




சேட்டானுங்க ( சவுகார்பேட்டை ) கிட்டயும், 

சேட்டனுங்க ( வடிதண்ணி ) கிட்டயும் வேலை பார்க்குறது 

ரொம்ப கொடுமைடா சாமி…

அப்ரைசலே போட மாட்றானுங்க பிக்காலிங்க..




வாழ்க்கையில ஒரு பிடிப்பு வரும்னு பார்த்தா,

உடம்புல அங்க அங்க  வாயுப்பிடிப்பு தான் வருது.

# ச்ச..என்ன எழவுடா இது..




பக்கத்தில் இருந்து யாராவது பரிமாறினா மட்டுமே திருப்தியா 

சாப்பிட முடியுது..பக்கத்தில எவனும் இல்லேன்னா மட்டுமே 

திருப்தியா ட்விட்ட முடியுது...


வெறிக்க வெறிக்க பார்க்கும்போதெல்லாம் கண்டுக்காம,

கடுப்புல போகும்போது லுக்கு விடுறீங்களே..

இது என்ன நியாயம் பொண்ணுங்களா..




அது எப்படிதான் முக்கியமான மெசேஜ் அனுப்பும்போது 

மட்டும் செல்போன் நெட்வொர்க்குகள் எல்லாம் நட்டுக்குமோ..

# ஏன்டா இப்படி..




படம் பார்க்கும்போது தெளிவா புரியுது...ஆனா அதற்கு நம்ம 

மக்கள் எழுதிய விமர்சனங்களை படித்த பிறகு..

ஹாப் பை  ராவா அடிச்ச மாதிரி தலை கிறுகிறுங்குது..




INTERVAL ல மக்கள் திங்குற தீனியை பார்த்தா படம் பார்க்க 

எப்பவுமே பசியோட தான் வருவாங்களோ..

# அப்படி என்னடா அவசரம் உங்களுக்கு.

No comments: