Thursday, October 13, 2011

தெய்வத்திருமகள்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


புகைப்படங்களோட கவிதைகள் போட ஆசை..

ஆனா நேரமில்லை..அதனால இனி 

கவிதைகள் ( போல ) மட்டும்..மன்னிக்கவும்..


தனிமையில் உன்னை நினைக்கும் என்னைக் காட்டிலும்,

அத்தனை வேலைகள் இருந்தும் " சாப்பிட்டியா " டான்னு 

கேட்கும் நீ உண்மையிலேயே தெய்வத்திருமகள் தானடி..


என்னை பார்த்தவுடன் உன் உதடுகள் செய்யும் காட்டும் 

புன்னகையை விட..உன் கண்களில் வழியும் நீரே என்னை 

சிலிர்க்கச் செய்கிறது..




என் தவறுகளை சுட்டிக்காட்டிவதும் நீ..

நான் தடம் மாறிவிடக்கூடாது என துடிப்பதும் நீ..

உன்னிடம் நான் எப்படி நடிக்க..


என்னைப்பற்றி எவ்வளவோ எழுதினாலும்,

உயிரில் கலந்த உன்னைக்குறிப்பிடும் ஓரிரு 

வார்த்தைகளே உயிருள்ளவை..




நான் நானாகத்தான் இருப்பேன் என்ற என் எண்ணம் , 

எனக்காக நீ வருந்தியவுடன் எங்கு போனது 

என்றே தெரியவில்லை..


எங்கும் நிறைந்து இருப்பது இறைவன் மட்டுமல்ல..

என் ஏஞ்சல் நீயும் தான்..காணும் பெண்களிடமெல்லாம் 

உன் ஏதோவொரு அம்சம்..




காதல் மிருகத்தை என் மீது ஏவி விட்டாய்..

இப்போது பார் அதை உன்னாலும் கட்டுப்படுத்த

முடியாதவாறு கட்டவிழ்ந்து அலைகிறது..



ஊடலில் இருந்த போதும் உன்னைப்பற்றி நானும்,

என்னைப்பற்றி நீயும் நினைக்க செய்ததே காதல்..




உன்னிடம் இல்லாததால் தான் என் இதயத்தை 

திருடி செல்கிறாயா கள்ளி..




நான் உன்னிடம் பொய் பேசமாட்டேன் என்ற உன் 

நம்பிக்கையே என்னை உன்னிடம் உண்மை 

மட்டுமே பேச வைக்கிறது..

No comments: