Sunday, October 23, 2011

வார்த்தைகளுக்குள் அடங்கா வானவில்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



இரு வரி  கவிதையாய் நாம்..பிரிந்து விடாதே..

நான் அர்த்தமற்று போய் விடுவேன்..



அடிக்கடி சிரிக்கும் என்னை எல்லோரும் ஏளனமாக பார்க்க..

சிந்தையில் இருந்து என்னை சிலிர்க்கவும்,சிரிக்கவும் 

வைக்கும் உன்னை நான் என்ன செய்ய..



உன் இதயத்தினுள் சென்று காதலை அறிய 

முடியாவிட்டாலும்,என்னைக்கண்டதும் படபடக்கும் 

உன் இமைகளில் கண்டு கொண்டேனடி..#மான்விழி..




உன்னைப்பற்றி எழுத எத்தனித்த போதே தெரிந்துகொண்டேன்..

247 எழுத்துக்களும் போதாதென..

#வார்த்தைகளுக்குள் அடங்கா வானவில்..




மொழியின் இலக்கணங்களை உடைத்தெறிந்து பேசும் 

மழலையின் பேச்சுக்கு இணையானது ஊடலில்

நீ சிணுங்கும் வார்த்தைகளும்..




எப்போதும் உன்னை அலட்சியப்படுத்தியே 

வாழ்கிறேன் நான்..தலைபோகும் அவசரத்திலும் நீ 

இல்லாது நான் தவித்து விடுவேன் என்று 

உணர்ந்து தகவல் அளித்து செல்கிறாய் நீ..

 
உனக்கு அடிக்கடி நான் போன் பண்ணுவது..

உன்னை தொந்தரவு செய்ய அல்ல..உன் 

குரலைக்கேட்காமல் நான் தொந்தரவுக்குள்ளாவதால் தான்..





என்னிடம் பேசுவது உன் அன்றாட நாளின் ஒரு நிகழ்ச்சி..

ஆனால் எனக்கோ அது மட்டுமே அன்றைய 

தினத்தின் மகிழ்ச்சி..


 

என் மீது விருப்பமில்லாமல் நடிப்பதில் உனக்கு 

அப்படி என்னதான் விருப்பமோ..

 

என்னை உனக்குப்பிடிக்கவில்லை என்றிருந்தால் கூட 

இத்தனை கவலைப்பட்டிருக்க மாட்டேன்..

ஆனால் நெருங்கிப்பழக நீ பயப்படுவதே உயிரை  

உலுக்கும் சித்ரவதையாய் இருக்குதடி..

2 comments:

ஆமினா said...

நச்

கடைசி வரிகள் சான்சே இல்ல...

ரசிச்சு எழுதியிருக்கீங்க

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நெகிழ்ச்சியுடன் நன்றிகள் ஆமினா..