Thursday, October 6, 2011

என்ன மாதிரியான ஏஞ்சல் நீ.

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




உனக்கான பிறந்தநாள் பரிசு வாங்க யோசித்தே 

பிறந்தநாளை மறந்துவிட்டு உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்..

நீயோ ஒரே ஒரு முத்தத்தில் மூர்ச்சையாக்குகிறாய்..




உன்னை மறப்பதை விட இறப்பதே மேல் என்று கூறுவது 

வெறும் வார்த்தை ஜாலங்கள் இல்லை..வாழ்வின் வலிகள்..


புவியீர்ப்பு விசையை உன்னால் உணர முடியாவிட்டாலும் 

அது எப்போதும் உன்னை விட்டு விலகுவதில்லை.. 

உன் காலடியில் தான் இருக்கும்..என் காதலைப்போல.







என் பேச்சினால் உன்னை உருக வைப்பது என் எண்ணம் அல்ல..

என் காதலை நீ உணரவேண்டுமேன்றே இத்தனை போராட்டம்..







உன்னைப்பார்க்க வந்த என்னிடம் தேங்க்ஸ் என்றாய்..

கடவுளை பார்க்க பக்தன் தான் கோவிலுக்கு போகணும்..

தேவதைகள் எப்போதுமே தேங்க்ஸ் சொல்லக்கூடாது.


உன் ஒரு விரல் தீண்டலில் என்னை மரிக்கவும் 

செய்கிறாய்,உயிர்த்தெழவும் வைக்கிறாய்..

என்ன மாதிரியான ஏஞ்சல் டி நீ..? 

5 comments:

rajamelaiyur said...

//
உனக்கான பிறந்தநாள் பரிசு வாங்க யோசித்தே

பிறந்தநாளை மறந்துவிட்டு உன்னிடம் மாட்டிக்கொள்கிறேன்..

நீயோ ஒரே ஒரு முத்தத்தில் மூர்ச்சையாக்குகிறாய்..


//

அருமையான வரிகள் ...

rajamelaiyur said...

//
உன் ஒரு விரல் தீண்டலில் என்னை மரிக்கவும்

செய்கிறாய்,உயிர்த்தெழவும் வைக்கிறாய்..

என்ன மாதிரியான ஏஞ்சல் டி நீ..?
//

ஏஞ்சலினா ஜூலியா ?

rajamelaiyur said...

//
உன்னைப்பார்க்க வந்த என்னிடம் தேங்க்ஸ் என்றாய்..

கடவுளை பார்க்க பக்தன் தான் கோவிலுக்கு போகணும்..

தேவதைகள் எப்போதுமே தேங்க்ஸ் சொல்லக்கூடாது.//

நன்றின்னு சொல்லணும்

rajamelaiyur said...

//
உன்னை மறப்பதை விட இறப்பதே மேல் என்று கூறுவது

வெறும் வார்த்தை ஜாலங்கள் இல்லை..வாழ்வின் வலிகள்..//

சத்தியமான வரிகள்

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தொடர்ந்து கமெண்ட் போடுறதுக்கு நன்றி பாஸ்..சந்தோஷமா இருக்கு..