Tuesday, October 25, 2011

ஏன் இப்படி ...45

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




வேலாயுதம்னு சொல்லி ப்ளேடும் ஒரு ஆயுதம் தான்னு 

நிரூபிக்காம இருக்கணும் கடவுளே..தொடர்ந்து 

எங்களால அடி வாங்க முடியாது..நாங்க பாவம்..




க்ரில் சிக்கன் போல க்ரிஸ்பியா பேசாம,விளக்கெண்ணையில 

போட்ட வெண்டைக்காய் மாதிரி வழ வழனு பேசுறவனுங்க 

மத்தியில நான் எப்படி வேலை செய்ய..?



கண்டுக்காத கடவுளுக்கு காணிக்கையா கொட்றான்..

கஷ்டப்படுற நான் கதறி அழுது கேட்டாலும் 

கொடுக்க மாட்றான்..மாசக்கடைசி கடன்..



ஒரு விஷயத்தை பத்தி பேசும்போது நமக்கு தெரிஞ்சதை 

சொல்ல விடாம அவங்களுக்கு தெரிஞ்சதை மட்டும் நாம 

கேட்கணும்னு நினைக்கிறது என்ன விதமான வியாதி..?




எந்த விஷயத்தை பேசுனாலும் இதே மாதிரி தான் எனக்கு 

கூட நடந்து இருக்குனு ஆரம்பிச்சு அறுவை 

போடுறவனுங்களை என்ன பண்ணலாம்…?




ஒரு வேலையை செய்ய நினைக்கும்போதும் சரி,

சும்மா இருக்கும்போதும் சரி பலவிதமான சிந்தனைகள் 

மனசில ஓடுது..என்ன பண்ணலாம்..




சிலருடனான சந்திப்பு சில நிமிஷங்களிலேயே வெறுத்து 

போயிடுது..சில பேரை சில நிமிஷம் சந்திச்சாலும் நினைவை 

விட்டு நீங்க மறுக்குறாங்க..ஹ்ம்ம்..

எங்க இருக்காளோ அந்த ஸ்கை ப்ளூ சுடிதார்..?



பிரச்சினைகளை தீர்ப்பதை விட பிரச்சினைக்கு 

காரணமானவர்களை தீர்த்துக்கட்டுவதிலையே குறியா 

இருக்கானுங்க..# சண்டையை அப்புறம் போடலாம்..

பிரச்சினையை சால்வ் பண்ணலாம் வாங்கடா..



ஒருத்தனோட கோபத்தை தூண்டும்போது தான் அத்தனைக் 

குப்பையும் வெளிய வருது..கழுவி கழுவி ஊத்திக்கிறானுங்க.

.# கேட்கவே நாராசமா இருக்குடா டே..நிறுத்துங்கடா..




கொடுமையில யும்  கொடுமை ரெண்டு டிபார்ட்மென்ட் ஹெட் 

சண்ட போடுறதை வேடிக்கை பார்க்கிறது..

தடுக்கவும் முடியலை..இடத்தை விட்டு போகவும்

முடியலை..#நல்லவேளை என் பாஸ் புள்ள பூச்சி..
 
ஆனா விஷமாச்சே..

2 comments:

வெளங்காதவன்™ said...

மிஸ்டர் கணேஷ்....
ஐயாம் கோயிங் டு காப்பி யுவர் போஸ்ட் இன்டு மை பேஸ்புக்..
யூ கேன் கிவ் அ கம்ப்லைண்டு டு சைபர் கிரைம்....

- வெளங்காதவன்...

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

தாராளமா...நம்ம கருத்து நாலு பேருக்கு போயி சேர்ந்தா சரி..