Friday, December 17, 2010

ஜோக்கூ...Part 2

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
வீதியில் அலைந்தேன் 
காதலை தேடி. 
வாழ்வினில் வந்தால் ஒரு
தேவதை லேடி. 
கடைசியில் மிஞ்சியது
மூணு வார தாடி 
மற்றும் ஒரு பாக்கெட்
வெள்ளை பீடி..



உள்ளொன்று வைத்து
புறமொன்று காட்ட 
தெரியாது எங்களுக்கு...
#கவர்ச்சி நடிகைகள்..
 





என்னை கொள்ள உன்

விழிகள் போதுமடி.. 

விஷம் வேறு ஏனடி தடவுகிறாய்...

மை இடும் மாலதி..







ஒரு நாளில் உயிர் விடும்

பூவை நேசிக்கும் என்னவள்

தினம் தினம் அவளுக்காக 

செத்து கொண்டு இருக்கும் 

என்னை ஏன் நேசிக்க மறுக்கிறாள்..

முறையிட்டேன் இறைவனிடம்...

இறைவன் சொன்னார்..


செம வசனம் மச்சி..






வாய் விட்டு சிரித்தால் நோய்

விட்டு போகுமாம்..

பலமுறை சிரித்தும் பயனில்லை..

பைத்தியக்காரன்.. ( இது அசலு..)





வாயில் விரல் விட்டு 

குத்தினால் வாந்தி வருமாம்..

பலமுறை முயன்றும் பலனில்லை..

குடிச்சது RC மச்சி..










அவள் பார்வைக்காக 

ஏங்கி தவித்தேன்..

பார்த்து சிரித்தாள்..

சந்தோஷம் வரவில்லை..

அவளுடன் அவள் காதலன்..

( அப்போ..நான் என்ன சும்மாவா..)





1 comment:

"தாரிஸன் " said...

ரொம்ப நல்லா இருக்கு மச்சி.......