Wednesday, October 13, 2010

ஏன் இப்படி...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


நல்ல பொண்ணுங்க பார்க்க அழகா 

இருக்குறது இல்ல...

அழகா இருக்குற பொண்ணுங்க நல்ல 

பொண்ணுங்களா இல்ல...

நல்ல பொண்ணா  இருந்து .. பார்க்கவும் அழகா

இருக்குற பொண்ணுங்க எல்லாம் தனியா 

இருக்குறது இல்ல.. எவனாவது ஏற்கனவே 

உஷார்  பண்ணி இருக்கான்...

நல்ல பொண்ணா , பார்க்க அழகா இருந்து , 

இன்னும் எவனுமே உஷார் பண்ணாம இருந்தா.. 

அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் எருமை 

மாடு மாதிரி அண்ணனுங்க இருக்காங்க...


நல்ல பொண்ணா , பார்க்க அழகா இருந்து , 

இன்னும் எவனுமே உஷார் பண்ணாம, 
 வளுங்களுக்கு  அண்ணன்களும்  இல்லாம  இருந்தா ... 

நம்மள அண்ணன்னு சொல்லிடுராளுங்க...




ஒரு பொண்ணு தன்னோட காதலை வீட்டுல 

சொன்னா... அவளை பெத்தவங்க கேட்குறது...


யாருடி அந்த பொறுக்கி ராஸ்கல்...


ஒரு பையன் தன்னோட காதலை வீட்டுல சொன்னா..

அவனை பெத்தவங்க கேட்குறது...

ஏன்டா பொறுக்கி ராஸ்கல் .. 

யாருடா அந்த பொண்ணு...


எப்பவுமே நாங்க தான் அவுட்டா ...



ரோட்ல ஒரு பொண்ணு குறுக்க போனால் 

வண்டியில வர்ற நம்ம மக்கள் சொல்றது...

பார்த்து போமா...

ஒரு பையன் குறுக்க போனால்  ...

எருமை மாடு  ... வீட்டுல

சொல்லிட்டு வந்துட்டியா...




இந்த உலகத்துல சாகறதுக்கு எத்தனையோ 

வழிகள் இருக்கு...


விஷம் , தூக்க மாத்திரை , தூக்குல தொங்குறது , 

உயரமான இடத்துல இருந்து குதிக்கிறது , 

ரயில் முன்னாடி  விழறது , தண்ணில  விழுறது ,

விஜய் படம் பார்க்குறது....இப்படி பல...


ஆனா... ஏனோ தெரியல.. எல்லா பசங்களும் 

பொண்ணுங்கள தான் தேர்ந்து எடுக்கிறாங்க...

( எனக்கு தெரிஞ்சி... மத்த எல்லா வழிகளையும் 

பிழைக்க வழி இருக்கு... ஆனா பொண்ணுங்க 

விஷயத்துல பிழைக்க வழியே இல்ல...)


நான் சின்ன பையனா  இருக்கும் போது... 

நான் எஞ்சினியர் ஆவேன் னு சொல்லி

கிட்டு இருப்பேன்...

அப்போ எனக்கு ரொம்ப பெருமையா 

இருக்கும்... என்ன பெத்தவங்க சந்தோசமா

ரசிச்சு சிரிப்பாங்க...

இப்போ நான் எஞ்சினியர் ஆயிட்டேன்... 

என்ன பெத்தவங்க ரொம்ப பெருமை படுறாங்க...

ஆனா ஊரே என்னை பார்த்து சிரிக்குது....








காதலிக்காமல்.....

எந்த ஒரு  மனிதனின் வாழ்க்கையும் 

முழுமை அடைவது இல்லை...

சரி தான் .. ஆனால்.. காதலிச்சா... 

அவன் வாழ்க்கை அதோட

முடிஞ்சு போயிடுமே...



கடவுள் ஆணை படைத்தார்... 

பின்பு ஓய்வு எடுத்தார்...

கடவுள் பெண்ணை படைத்தார்..

அதன் பின்பு.. ஆணுக்கும் 

ஓய்வு கிடைக்கவில்லை... 

அவருக்கும்  ஓய்வு கிடைக்கவில்லை...






LKG படிக்கிற பொண்ணு : பென்சில் தருவியா...

LKG படிக்கிற பையன் : மிஸ் கிட்ட சொல்லிடுவேன்..

நாலாவது  படிக்கும் போது...


பொண்ணு : பேனா தருவியா...

பையன் : இந்தா..


பத்தாவது படிக்கும் போது...

பொண்ணு : டே.. உன்னோட பேனா 

தர முடியுமா ப்ளீஸ்..

பையன் : இது என்ன கேள்வி... 

உனக்கு இல்லாததா  ..கருப்பு கலர் வேணுமா.. 

நீல கலர் வேணுமா.. சிவப்பு கலர் வேணுமா.. 

பச்சை கலர் வேணுமா..




காலேஜ்  படிக்கும் போது...

பையன் : உன்னோட பேனா சரியா எழுதலைன்னு

நினைக்கிறேன்.. இந்தா என்னோட பேனா 

யூஸ் பண்ணிக்கோ...






வேலை பார்க்குற ஆபீஸ்ல...

பையன் : புதுசா பேனா வாங்கினேன்.. 

எழுதி பார்த்துட்டு குடு...


அடி.. பாவிங்களா.. எப்படி இருந்த

பசங்கள இப்படி ஆக்கிட்டீங்களே...