Friday, October 15, 2010

இந்தியக்குடிமகன்கள்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க

 நம்ம இந்தியக்குடிமகன்களை எப்படி 

அடையாளம் கண்டு பிடிக்கிறது  ....

இதோ...


காட்சி 1 : 


ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

அதை ஒருத்தன் பார்த்தும் பார்க்காத 

மாதிரி போனான்னா...

நீங்க இப்போ மும்பைல இருக்கீங்க..


காட்சி 2 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

ரெண்டு பேரும் தங்களோட மொபைல் போன 

எடுத்து அவங்க அவங்க நண்பர்களை வரவழச்சு.. 

இப்போ ஐம்பது பேரு சண்டை 

போட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா...

அது  பஞ்சாப்...

காட்சி 3 :
 
ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க..

மூணாவது ஆள் வந்து அவங்கள விலக்கி 

சமாதனப்படுத்த நினைக்கிறாரு..
 
அந்த ரெண்டு பேரும் சேர்ந்து அவர போட்டு

அடிக்கிறாங்கன்னா நீங்க நம்ம 

தலை நகரத்துல இருக்கீங்க..

காட்சி 4 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்பா ஒருத்தர் வந்து அமைதியா அந்த எடத்துல

டீக்கடை போட்டாருனா    .. 

அது நிச்சயமா அஹமதாபாத் தாங்க  ..


காட்சி 5 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் வந்து அவங்க சண்டையை

நிறுத்தறதுக்காக  ஒரு கம்ப்யூட்டர்   ப்ரோக்ராம் எழுதி...

அந்த ப்ரோக்ராம்ம்ல வைரஸ் இருந்து அது வொர்க் 

அவுட் ஆகலேன்னா நீங்க 

பெங்களூரு ல இருக்கீங்க...


காட்சி 6 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

இன்னும் ரெண்டு பேர் அங்க வந்து யார் மேல 

தப்புன்னு வாக்கு வாதம் பண்ணாங்கன்னா  ...

அது கொல்கத்தா...


காட்சி 7 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

பக்கத்துக்கு வீட்டுல இருந்து ஒருத்தர் வந்து...

என் வீட்டுக்கு முன்னாடி சண்டை போடாதீங்க...

வேற எடத்துல போயி சண்டை போடுங்கன்னு சொன்னா...

சேட்டா... அது கேரளா வானு...


காட்சி 8 : 

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

கூட்டம் கூடிடுச்சு...

அப்போ கூட்டத்துல இருந்து ஒருத்தர் 

யாராவது போயி அவங்கள விலக்கி 

விடுங்கப்பான்னு  சொன்னா...


அது வேற என்ன...

நம்ம சிங்கார சென்னை தாங்க...


காட்சி 9 :

ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.. 

மூணாவது ஆள் ஒரு கேஸ் பீர் கொண்டு வந்து ...

அதை மூணு பேரும் குடிச்சிட்டு அமைதியா

நண்பர்களா போனாங்கன்னா

அது தாங்க கோவா...

நான்  எப்பவும்  எல்லாரும் 

நண்பர்களா  இருக்கணும்னு  

தாங்க  நினைப்பேன் ...

நீங்க  எப்படி ...











No comments: