Sunday, May 6, 2012

சிறகுகள் இல்லா தேவதை..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



ஒப்பிட முடியாத ஒரு சில விஷயங்களில் ஒன்று 

தான் நீ..# ஐ லவ் யூ ஹனி..






உன்னை மறக்க முடியாமல் நான் தவிப்பதை 

எண்ணிக் கவலை கொள்கிறாய் நீ..நீ நிம்மதியாய் இருக்க ,

உன்னை மறந்தது போல் நடிக்கிறேன் நான்..# ஹனி பெயர்ச்சி..






என் மகிழ்ச்சிக்காக சிறிது நேரமேனும் சந்திக்க 

சம்மதிக்கிறாய் நீ.. நொடிப்பொழுதுகளில் என் மனவாட்டம் 

அறியும் உன் கண்களைக் கண்டே பயந்து 

தவிர்க்கிறேன் நான்..#போ..நீ..போ..முடியல..பம்ப்ளிமாஸ்..








இறப்பின்றி வாழ அமிர்தம் வேண்டி அத்தனை 

கஷ்டப்பட்டார்களாம் தேவர்கள் ..உன் இதழ் முத்தம் 

வேண்டி நான் கஷ்டப்பட்டதை விடவா..?






பிறந்த நாள் பரிசாக முத்தம் தருகிறேன் என்றாய்..

உன் ஒவ்வொரு முத்தம் பெற்ற பிறகும் புதிதாய் 

பிறப்பேன் என்றேன் நான்..உடனே வெட்கப்பட்ட  

உன்னைக்கண்டு செத்துக்கிடக்கிறேன்..ம்..சீக்கிரம் உயிர் கொடு..






என் அத்தனை எதிர்பார்ப்புகளையும் அடித்து நொறுக்கி 

விடுகிறது உன் ஒரு அலட்சியப்பார்வை..






உன் ஒவ்வொரு அசைவுகளையும் அணு அணுவாய் 

ரசித்துக் காதலித்தவன்,எப்படி ஹனி உன் மேல் காதல் 

இல்லாதது போல உன்னிடம் நடிக்க முடியும்..

#புரிஞ்சிக்க மாட்றியேடி பம்ப்ளிமாஸ்..






உன்னிடம் நான் காதலை எதிர்பார்த்துக் 

காத்திருப்பதன் காரணம்,அத்தனை நம்பிக்கையை 

நீ தந்தது தான்..#நம்பிக்கை துரோகம் தப்புன்னு சொல்வாங்க..





உன்னைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு முறையும் 

என் மனம் உன்னை சந்திக்கவே ஏங்குகிறது..

No comments: