Thursday, May 3, 2012

ஏன் இப்படி ... 61

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



எக்ஸாம்ல வெறும் பேப்பரை வச்சிக்கிட்டு 

இருக்குறவன்கிட்ட இன்னொருத்தன் வந்து எனக்கு 

பேப்பர் காட்டுடானு கேட்டா பையன் ஒரு ரியாக்ஷன் 

கொடுப்பான் பாருங்க..அதையே தான் நானும் 

கொடுக்குறேன் என் கிட்ட வந்து ஏன் மச்சி..

நீ யாரையுமே காதலிக்க மாட்றேனு கேட்குறவனுங்க கிட்ட  





முடிவெட்ட சலூனுக்கு போகாம சில பேரு சிற்பிக்கிட்ட 

போவானுங்க போல..என்னமா செதுக்கி இருக்கான்..





BSNL புதுசா ஒரு டேப்லட் அறிமுகப்படுத்தி

இருக்காங்களாம்.தெரியுமாடானு கேட்டா.. அது 

என்ன டேப்லட் மச்சி..பன்றிக்க்காயச்சலுக்கு 

கவர்ன்மென்ட் கொடுக்குதான்னு கேட்குறான் ஒருத்தன்.





நோய் வந்துடக்கூடாதுன்னு முன் எச்சரிக்கையா இருக்குறது 

தப்பு இல்ல..அதுக்காக இன்னும் கண்டே பிடிக்காத 

நோய் வந்துடுமோன்னு கவலைப்பட்டா காண்டா 

இருக்குமா இல்லையா..?

#பாஸ் கேட்குற கேள்வி அப்படி தான் இருக்கு..




கழிசடைகள்கிட்ட வேலையைக் கொடுத்துட்டு ரிசல்ட் 

வரலைன்னு புலம்புறானுங்க புண்ணாக்குங்க..

# வேலி ஓரம் ஒதுங்குறவனைக் கூட்டிட்டு போயி 

வெஸ்டர்ன் டாய்லெட்ல விட்டா எப்படி வரும்




செய்வதெல்லாம் சூனியக்காரன் வேலை..ஆனா முகத்தை 

மட்டும் சுட்டி விகடன்ல வர்ற குழந்தை போல வச்சி

இருக்கானுங்க..#உலகமகா நடிப்புடா சாமி..




நம்மோட கோபத்தை புரிஞ்சிக்காம சண்டை போடும் பெண்கள்..

அவங்க கோபத்தை மட்டும் நாம புரிஞ்சிக்கணும்னு 

எதிர்பார்க்கிறாங்க..# அது தெரியாமத் தானே எல்லா 

ஆண்களும் முழிக்கிறோம்..




அடிச்சாக்கூடா தாங்கிக்கலாம் போல..ஆனா யாராவது 

அட்வைஸ் பண்ணாலே அழுகையா வருது..

#என்னை விட்டுடுங்கடா டேய்..மயக்கமா இருக்கு..




நம்ம மக்களின் அனைத்து கவலைகளுக்கும் ஒரே மருந்து சரக்கு..

ஆனா அந்த மருந்திலும் இப்போ ஏகப்பட்ட கலப்படம்..

#விடிய விடிய ஒரு புல் அடிச்சும் சப்புன்னு இருக்கு..






காதல் எப்போ வரும்னு தான் இத்தனை நாள் காத்துக்கிட்டு

இருந்தேன்..இப்போவெல்லாம் கரண்ட் எப்போ வரும்னு 

காத்துக்கிட்டு இருக்கேன்..

# பொண்ணுங்க இல்லைனாலும் பரவாயில்லை..

புழுக்கம் இல்லாம இருக்கணுமே..

No comments: