Thursday, May 10, 2012

ஏன் இப்படி ... 62

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க






வார்த்தைகளாலும்,செயல்களாலும் காயப்படுத்துபவர்கள் 

மத்தியில் பார்வையால் காயப்படுத்த பெண்களால் 

மட்டுமே முடியும்..# வேடிக்கைப் பார்த்தது ஒரு குத்தமா..? 

என்னா முறைப்பு…!!


 
இளையராஜாவையோ,ரஹ்மானையோ,சச்சினையோ 

தப்பா பேசினா கோபம்  வரும் நமக்கு..ஈழத் 

தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு காட்ட 

எப்படி நேரமிருக்கும்…?



இந்த NH 47 ல அரை மணி நேரத்துக்கு ஒரு 

ஆம்புலன்ஸ் போயிக்கிட்டே இருக்கு..

கடவுளே.. BE SAFE ON ROADS மக்களே..




காரணங்கள் தேவை இல்லை,ரிசல்ட் தான் வேணும்னு 

நம்மகிட்ட சொல்றவன்..அவனுக்கு மேல இருக்குறவன் 

கேட்டா அவனும் நாம சொல்ற காரணங்களையே 

தான் சொல்றான்..#அப்புறம் ஏன்டா இப்படி..






எந்த ஒரு பழக்கத்தையும் சில நாட்கள் விட்டுட்டு மறுபடியும் 

தொடர்ந்தா கஷ்டமா இருக்கும்..ஆனா காதலிக்கிறதை 

மட்டும் எப்போ பண்ணாலும் நல்லாவே இருக்குது…




நம்ம ஊருல எப்போ கரண்ட் வரும்னு கூட 

கண்டுபிடிச்சிடலாம் போல..ஆனா பொண்ணுங்க 

மேல காதல் எப்போ வருதுனே தெரிய மாட்டுது..

# கண்ணை சிமிட்டிக்கிட்டே இருக்கா..

எனக்கு காதல் வந்துடுச்சு..




எல்லாத்துக்கும் சரின்னு சொல்றான் ஒருத்தன்..

எடுத்தவுடனே முடியாதுன்னு சொல்றன் ஒருத்தன்..

இவனுங்க மத்தியில நான் எப்படி பொழப்பை நடத்துறது… 



 

எல்லாரும் நீ என்னை காதலிக்கிற வரைக் 

காத்திருப்பேன் னு சொல்வாங்க..இவ என்னடான்னா 

நீ என்னைக் காதலிக்காத வரைக்கும் 

காத்திருப்பேன்னு சொல்றா..#ஞே..







உனக்காக மாறிய என்னை,இனி யாருக்காகவும் 

மாற்றிக்கொள்வதாய் இல்லை..#கடைசியில 

எனக்கும் காதல் தோல்வியா..அட வாத்சாயனா..

இதென்ன சோதனை..






நம்மோட குறைகளை கண்டு விலகினா கூட 

பொறுத்துக்கலாம்..ஆனா அடுத்தவங்களோட ஒப்பிட்டு 

பார்த்து நீயும் அப்படி தான் இருப்பனு சொல்லி 

விலகுறதை தான் தாங்கிக்க முடியல..

1 comment:

அகல்விளக்கு said...

நீ நடத்து மச்சி...