Wednesday, May 2, 2012

காதல் கள்ளி

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க








உன்னுடன் பேச காரணங்களைத் தேடியே களைத்து 

போகிறேன் நான்..ஒவ்வொரு முறையும் சிரித்து 

பேசியே பொய்க்காரணங்களைத் தேட ஊக்கமளிக்கிறாய் நீ..







என் அத்தனை பொய்களையும் சுலபமாக கண்டுபிடித்துவிட 

முடிகிறது உன்னால்..என் உண்மையானக் காதலை மட்டும் 

நீ உணராமல் போனது ஏனடி..?






என்னுள் கலந்த உன்னை பிரிக்க நினைப்பது கண்களில் 

இருந்து பார்வையைப் பறிப்பது போல..நீ இன்றி நான் 

ஒன்றுமில்லை ஹனி..







முத்தை சுமப்பதினால் சிப்பிக்கு பெருமை போல..

என்னுள் நீ வந்த பிறகே எனக்கு மரியாதை..





அழகான உவமைகள் நிறைந்தது தமிழ் மொழி 

மட்டும் தானாம்..உன்னுடன் ஒப்பிட முயன்றேன்..

ஒன்று கூட தேற வில்லை..







பனிப் பாறையாய்  இருந்த என்னை,உன் கண்களின் 

வெளிச்சம் கொண்டு உருக வைத்த தேவதை ஸ்த்ரியடி நீ..






நீ இன்றி நான் தனிமையில் வாடுகிறேன்..ஆனால் அந்த 

தனிமையோ எப்போதும் இணை பிரியாமல் என்னுடன்..

# என்னடா நடக்குது இங்க..என் கூட இருந்தவ எங்க..







என் மீதான உந்தன் காதல் சூரிய வெளிச்சம் போல..

சில நேரங்களில் சுகமாக உன் கூடலில்..சில நேரங்களில் 

சூடாக உன் ஊடலில்..





காதல் கோடையில் காமத்தாகம் கொண்டு தவிக்கிறேன்..

உன் இதழில் ஊறும் எச்சில் அமுதம் தந்து உயிர் கொடு ஹனி..







நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நினைப்பது என் 

காதல்..நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென 

நினைப்பது உன் காதல்..தேவதை ஸ்த்ரீயடி நீ..

No comments: