Friday, May 4, 2012

தேவதை ஸ்த்ரீ

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க







உன் காதலை சுவாசித்தே வாழ்கிறேன் நான் என்றேன்..

நீ வாழவே நான் சுவாசிக்கிறேன் என்றாய் நீ..

தேவதை ஸ்த்ரீயடி நீ..






கரிமிலவாயுக்கொண்டு உயிர்க்காற்றைத் தரும் 

மரங்களை போல..என் சோகங்களைக் கொண்டு 

மகிழ்ச்சியைத் தரும் தேவதை ஸ்த்ரியடி நீ..





நீ பூசும் ஒவ்வொரு வாசனைத் திரவியமும் உன் 

மீது பட்டபின்பு தன் சுயம் இழந்து கர்வம் தொலைக்கின்றன..




உன்னை வியப்படைய செய்யவே புதுப்புது தகவல்களை 

தேடி அலைகிறேன் நான்..ஒவ்வொரு முறையும் 

வித விதமான முகபாவனைகளில் மூழ்கடிக்கிறாய் நீ..





காதலித்ததாக வேண்டுமென்ற கட்டாயம் இருப்பின் 

எனக்கு ஒரு பெண் போதும்..ஆனால் நான் வாழ நீ வேண்டும்.






நீரைப்போலவே நீயும்..என் மனநிலைக்கு ஏற்றவாறு 

ஒவ்வொரு முறையும் மாறி என்னை ஏந்திக்கொள்கிறாய்..







என் மீதான உன் காதலை வெளிக்கொணர எனக்கிருக்கும் 

ஒரே அஸ்திரம்..நீ யார் எனக்கு எனக் கேட்பதே..

#பேயாட்டம் ஆடிட்டா..




உன் திருப்திக்காக பொய்யாய் நடிக்கிறேன்..ஆனால் 

சில கணங்களிலேயே உண்மையை உளற வைத்து 

விடுகிறாய்..#எனக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ..?






ரோஜாவும்,மல்லிகையும் தங்கள் வாசனைக் 

குறித்து போட்டியிட,புன்னகையுடன் அனுப்பிவைத்தேன்

 உன்னிடம் ..நீ சூடி தந்த பின்பு மவுனமாய் 

இருக்கின்றன இரண்டும்.








உன் ஒவ்வொரு வார்த்தைகளையும் காற்றை விட வேகமாய்

கிரகிக்கும் எனக்கு..நீ விடைபெற எத்தனிக்கும்போது 

உதிர்க்கும் அப்புறம் பார்க்கலாம் / பேசலாம் மட்டும் 

கேட்பதே இல்லை..

No comments: