Tuesday, May 1, 2012

ஏன் இப்படி ... 60

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க








பொண்டாட்டியை பக்கத்தில வச்சிக்கிட்டு போன்லயே 

பேசிக்கிட்டு இருக்கானுங்க..இவனெல்லாம் ஒரு 

பொண்ணைக் கல்யாணம் பண்ணியத்துக்கு பதிலா 

போனையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்..

#நாங்க எத்தனை பேரு சும்மா இருக்கோம்னு 

தெரியுமாடா உங்களுக்கு..ச்ச..திங்கத் தெரியாதவனுக்கு 

தான் பன்னு கிடைக்குது..





எல்லா பொருளும் தயாரிச்சு சில வாரங்களுக்கு 

பிறகே கிடைக்குது..டாஸ்மாக்ல எந்த சரக்கை 

வாங்கினாலும் அதிகபட்சம் பத்து நாளைக்குள்ள 

தயாரிச்சதாவே இருக்கு..மிகப்பெரிய நுகர்வோர் சந்தை








எல்லாருக்கும் அவங்கவங்க லெவலுக்கு சில 

பிரச்சினைகள் இருக்கு..ஆனா பல பேருக்கு அது 

என்னனே தெரிய மாட்டுது..எல்லாத்துக்கும் பயப்படுறாங்க..








பிரச்சினை இது தான்னு சொன்னா தீர்வு தேடலாம்..பிரச்சினை 

என்னனே தெரியாது..ஆனா நீதான் அதுக்கு தீர்வு 

சொல்லணும்னா நான் என்ன பண்ணுவேன்..

# விதவிதமா டார்ச்சர் பண்ணுறானுங்களே..






பொண்ணுங்க அழும்போதும்,பசங்க புலம்பும்போதும் 

கூட இருப்பது தான் மிகக்கொடுமை..#முடியலடா சாமி..






மரணமொக்கைப் போட்டாலும் முகம் மாறாம சிரிச்சுக்கிட்டே 

இருக்க எப்படி தான் முடியுதோ..#சொம்படிக்கிறதுல 

சாம்பியன்ஷிப் வச்சா நம்ம மக்கள் ஈஸியா ஜெயிச்சுடுவாங்க..








பிரச்சினையைக் கூட சமாளிச்சுடலாம்..ஆனா 

அதுக்கு ஒவ்வொருத்தனும் கொடுக்குற அட்வைஸ்களை 

நினைத்தால் தான் டர் ஆகுது..#சம்மன் இல்லாம 

ஆஜர் ஆகி அழ வைக்கிறானுங்க..








சுவிசேஷக் கூட்டங்களில் ஸ்தோத்திரம் சொல்றது 

போலவே வணக்கம் சொல்றானுங்க..ஏன்டா ஏன்..

காலையிலேயே பயமுறுத்துறானுங்க .






போன் வந்த புதுசுல நேரில் பேசுறது குறைந்தது..

இப்போ பேஸ்புக் வந்ததுக்கு அப்புறம் போன் ல 

பேசுறது குறைந்து போகுது..





நீண்ட நாள் கழித்து என் நண்பர்கள் எவன் போன் 

பண்ணினாலும் அவனவன் கல்யாணத்தைப் பத்தியே 

பேசுறானுங்க..# கல்யாண வயசு வந்துடுச்சோ..ஹ்ம்ம்..

எனக்கு ஒண்ணு கிடைக்க மாட்டுதே..

No comments: