Monday, December 21, 2009

தூக்க கலக்கத்துல எழுப்பி கவிதை கேட்டா..இப்படிதான் உளறுவேன்...

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க
கனவு தேசத்தில் நான் கால் பதித்த நேரம் ,

எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல "ஓலமிடும் " அலார சத்தம்...

மறுத்து உறங்க சொல்லும் என் கண்கள்....
மனமில்லாமல் எழ வைக்கும் அலுவலக அழைப்பு
பழக்கம் இல்லா பல் துலக்கு ,
காயத்திற்கு உட்பட்ட முக சவரம் ...

உறக்கம் நீங்கா அரைகுறை குளியல் , அவசர சாப்பாடு ...
சாலை நெரிசலில் வாகனங்களுடன் ஒரு மயான சவாரி ...
தவிர்க்க முடியாத தாமதம் ...
கைகொடுக்கும் காலம் கடந்த பொய்கள் உயர் அதிகாரியிடம்....

எப்பொழுது மாறும் இந்த நிலைமை....

No comments: