Thursday, August 29, 2013

ஏன் இப்படி ...76

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


தற்கொலை பண்ணிக்கிட்டவனுக்காக வருத்தப்படாம 

எங்கிட்டே சொல்லிட்டு செத்திருக்கலாம்னு சொல்றவனுங்க சங்கை 

கடிக்கணும் போல இருக்கு..!!!

 


நொந்து போயி இருக்கோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஆறுதல் 

சொல்லலைனாலும் பரவாயில்லை.. அட்வைஸ் பண்றேன்னு 

அழிச்சாட்டியம் பண்ணாதீங்கடா டேய்



காலையில கண்விழித்ததும் தினமலர் பேப்பர் கண்ணுல 

பட்டது..தலையங்கம் "கைவிரிப்பு..."# வெளங்கிடும்.. பக்கத்து ரூம் 

பரதேசிகளை வெட்டினா சரியாயிடும்..

 



சண்டை  போடுறவனுங்களை விட , சொம்பு அடிக்கிறவனுங்க 

தொல்லை ஓவரா இருக்கு..#என்னமா அடிக்குறானுங்க.

 



எங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு நாங்க சொல்லியும் அதையே 

பேசிப்பேசி காண்டாக்கிப் பார்க்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோசம் 

பாஸ் / கேர்ள்ஸ்..?




தப்பு பண்ணியதை மறைக்கிறவன் கூட பரவாயில்லை..அதை 

இன்னொருத்தன் மேல போடுறவனுங்களா.. உங்களைத் திட்ட 

வார்த்தையே இல்லைடா..!!!

 



பதில் தெரியலைனா சொல்லமுடியாதுன்னு கெத்தா சொல்லிடுங்க.. 

கேள்விக் கேட்ட எங்களையே , அழும் அளவுக்கு குழப்பாதீங்கடா டேய்..

 



நாங்க உங்களைக் கேள்விக் கேட்டா மட்டும்"உனக்கு மட்டும் ஏன் 
 
இப்படியெல்லாம் தோணுதுன்னு" கேட்டு 

எங்களைக் கொன்னு எடுப்பதை 

எப்போதான் நிறுத்துவீங்க பாஸ் / கேர்ள்ஸ்..?

 
நீங்க தப்பு பண்ணியதை நாங்க கண்டுபிடிச்சு கேள்விக் கேட்கும்போது
மட்டும் புரியாத மாதிரியே முகத்தை வச்சிக்குறீங்களே..? 
எப்படி பாஸ் / கேர்ள்ஸ்..?
 
காதலியிடமும் , பாஸிடமும் அடிக்கடி கரகாட்டக்காரன் செந்தில் 
ரியாக்ஷன் கொடுக்க வேண்டி இருக்கு..#ச்ச.. என்ன வாழ்க்கைடா இது..

No comments: