Thursday, August 22, 2013

மாத்தி யோசி .. 70

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


ரெண்டு பெரும் மாறி மாறி கொடுத்துக்கிட்டா தான் அது கைமாத்து.. 

எப்பவும் ஒருத்தனே கொடுத்தா அது ஏமாத்து..

(வாங்குனா கொடுக்கவே மாட்றானுங்க..)



கூண்டுல மாட்டிக்கிட்ட அப்புறம் சிங்கமா இருந்தா என்ன..? 

சிறு முயலா இருந்தா என்ன..? தற்கொலை பண்ணிக்க 

காதலிச்சா என்ன..? கல்யாணம் பண்ணா என்ன...?

 


கொஞ்சநாளில் சரியாகிடும்னு  தனக்குத்தானே 

சமாதானம் சொல்லிக்கிறானுங்க..அது,சரி 

ஆகலைனா சலிச்சுக்குறானுங்க.. 

#இதுக்குதான் நான் ஆரம்பத்திலேயே 

அசால்டா இருக்குறது..அக்காங்..





நிறைய பேசினாலும் , இல்ல ரொம்ப நாள் பேசாம விட்டாலும் 

கருத்து வேறுபாடுகள் அதிகமாகுது.. #ஹ்ம்ம் .. எல்லா 

உறவுகளிலும் இடைவெளி அவசியமாகிறது..

 


கேள்விக் கேட்குறவனைக் காண்டாக்க ஒரே வழி..புரியாத மாதிரியே
 
நடிக்கிறது..#எவ்வளவு ஆடிட்டிங் பார்த்திருப்போம்..


 
ஆம் என்பது பெரும்பாலான நேரங்களில் புரியாமலையே 

சொல்லப்படுகிறது..# ஆமாங்கனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்..

 


தேவைகளைப் பொறுத்தே இப்போதெல்லாம் தேவதைகள் 

தீர்மானிக்கப்படுகிறார்கள்..#ஹ்ம்ம்...
 


 
நல்லவன் என்பவன் யாரெனில் எனக்கு தீங்கு செய்யாதவன்..# நல்லா 

இருக்குடா உங்க லாஜிக்..!!!



 
நேத்து நடந்த ஒரு நல்ல விஷயம் ஒருத்திக்கு புடவை 

எடுக்கப்போறேன்னு இன்னொருத்திக்கிட்டனு மாறி மாறி 

சொன்னேன்..#ரெண்டு பெரும் நம்பலை..# விஷயம் தெரிஞ்சா கூட நான் 

பொய் சொன்னேன்னு சொல்ல முடியாதுல.. 

No comments: